14 Sept 2010

உன் காதல் கொடு


உன்னை பார்த்து செல்ல
பகலில் சூரியனும் உதிக்குதே...!
இதயமே...! இரவில் உன்னை
நிலவு வந்து ரசிக்குதே...!!

கண்ணாடி வானமும் -உன்

முன்னாடி உடையுதே...!
பெண்ணே...! உன்னை கண்டு
வெண்மேகம் உருகுதே...!!

உன் கூந்தலில் ஒட்டிக்கொள்ள

கோடி பூக்கள் வேண்டுதே...!
தேவதையே...! தென்றலும் உன்னை
தேடி வந்து தீண்டுதே...!!

உன் பாதம் பட

பாதைகள் தவம் கிடக்குதே...!
அழகே...! உன்னை தேடி இப்போது
அந்த வானவில்லும் நடக்குதே...!!

உன் கைகள் பட்டால்

காகிதப் பூக்கள் கூட
கண் திறக்கும்...!
அன்பே...! உன் காதல் கொடு -என்
இதயம் உனக்காய்
இன்னொருமுறை பிறக்கும்...!!

----அனீஷ்...
SHARE THIS

1 comment: