13 Oct 2010

ஏனோ நான்....


கனவுகள்
கலைந்துவிடுமோ
என்ற பயம்...!

பார்ப்பதை விட,
அழுவதையே
அதிகம் விரும்பும்
என் கண்கள்...!

என் பேனாவுக்கு
கவிதை எழுதும் சக்தியை
கொடுத்து விட்டு,
என் இதயத்திற்கு
தாங்கும் சக்தியை
தர மறந்த கடவுள்...!

வழி தெரியாத வாழ்க்கையில்
அடிக்கடி
தனியாகி போகும் நான்...!

எதற்க்கும் பயன்படாமல்
வீணாகிபோகும் என் ஜென்மம்...!

எவற்றிற்கெல்லாமோ
காத்திருந்து
களைத்துப்போய்
கடைசியாய்
மரணத்திற்க்காய்
காத்திருக்கும் மனம்...!

எல்லாமே எனக்கு
எதிராய் இருந்தாலும்,
என்னை யாரும்
ஜெயித்துவிடுவதில்லை...!
ஏனோ நான் தான்
தோற்றுப்போகிறேன்...!!


-----அனீஷ்...
SHARE THIS

3 comments: