18 Nov 2010

தண்டனைகள்


வழியெங்கும் என்னை
வரவேற்க்கின்றன...!
பள்ளங்களை மட்டுமே கொண்ட
பரிதாபமான பாதைகள்...
 
சில கணங்களில் என்னை
சின்னாபின்னாமாக்குகின்றன...!
விடைகளே இல்லாத கேள்விகளால் - நான்
விழிபிதுங்கி நிற்க்கும் தருணங்கள்...!!

என்னை புரிந்துகொள்ளாமல்
ஏளனம் செய்கின்றன...!
உணர்வுகள் இல்லாத
ஊனமான சில உள்ளங்கள்...

இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!

இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...

ஏமற்றங்கள்
என்னை ஒன்றும் செய்யாது...!
தண்டனைகள் என்னை
தகர்த்தும்விடாது...!!

அடிக்கடி நீ என்னை
ஆறாத வலிகளை
அடிநெஞ்சில் சுமக்கச்சொல்கிறாய்...!

தவறுகள் செய்யாமலே
தண்டனைகள் எனக்கு...

நீ தண்டிப்பதாய் நினைத்து,
நிர்ப்பந்தமாய் என்னை நீ
சிலுவையில் அறைவது
நியாயமாயிருக்கலாம் உனக்கு...!
அதிலொன்றும்
ஆச்சரியமில்லை...!!

ஆனால்
ஆணிகள் ஏன் என் இதயத்தில்...

-----அனீஷ்...
SHARE THIS

2 comments:

  1. hmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    ReplyDelete
  2. keep it up write more like this poems dont stop writing

    ReplyDelete