5 Dec 2010

இதயம் தந்தால்


அன்பே! நீ
பார்த்து நின்றால்
சூரியன் கூட
எரிவதை மறக்கும்...!!

சிலையே! நீ
சிரித்துச் சென்றால்
மடிந்த மலர்களும்
மறுபடி உயிர்க்கும்...!!

பெண்ணே! நீ
பேசிச் சென்றால்
சங்கீதம் உன்னிடம்
சரிகம கற்க்கும்...!!

உயிரே! நீ
உன் பெயரை தந்தால்
ஒற்றை சொல்லில்
ஒரு கவிதை கிடைக்கும்...!!

கண்ணே! உன்
கால்கள் பட்டால்
கடற்கரை மணலும்
கல்வெட்டாகும்...!

என் இதயமே! நீ
உன் இதயம் தந்தால்
பூமியில் எனக்காய்
புதிய சொர்க்கம் பிறக்கும்...!!

----அனீஷ்...  
SHARE THIS

7 comments:

  1. great love.. can be felt while reading...

    ReplyDelete
  2. nalla eruku anish. i wnt ask u 1thing. who is tat lucky girl? :)

    ReplyDelete
  3. un perai tandal otai sollil oru kaviti kidikum. anisssssssssh wowwwwwwwwww. itula enke erundu vardu????????

    ReplyDelete
  4. இதயம் விரைவில் கிடைக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. இதயம் கிடைத்து சொர்க்கம் காண வாழ்த்துக்கள். நல்ல கவி நடை பராட்டுக்கள.

    ReplyDelete