29 Dec 2010

இன்னும் உறங்காமல்...

இன்னும் உறங்காமல்...


இரவு முடிய,
இருளிலிருந்து விடிய
இன்னும் நேரமிருக்கிறது...!

நிலவு மறைய,
நீலவானம் தெரிய
நீண்ட நேரம் இருக்கிறது...!

உலகமே
உறங்கிக் கொண்டிருக்கும்
இந்த தருணத்தில்
இன்னும் உறங்காமல் - என்
இமைகளில் விழித்திருக்கின்றன...!
உன் நினைவுகள்...

----அனீஷ்...

26 Dec 2010

மனிதனாக பிறந்த இறைமகனே...!

மனிதனாக பிறந்த இறைமகனே...!


பூமியில் அன்பு
பூத்து குலுங்கவே
பூவாக மலர்ந்தவனே...!

பாலைவன இதயங்களும்
பசுமையாய் மாறிட
பாவிகளுக்காய் வந்தவனே...!

கல்வாரி மலையிலே
காயங்கள் பெறவே
கருணையோடு பிறந்தவனே...!

மனங்கள் எல்லாம்
மகிழ்ச்சியில் நிறைந்திட
மனிதனாய் உதித்தவனே...!

அகிலத்தார் நெஞ்சங்கள்
அமைதியில் திளைத்திட
அன்பாக முளைத்தவனே...!

மாட்டுத்தொழுவத்திலும் - இன்று
மனித மனங்களிலும்
மனிதனாக பிறந்த இறைமகனே...!

-----அனீஷ்...

17 Dec 2010

ஒரு துளி கண்ணீர்

ஒரு துளி கண்ணீர்


சுவாசமாய் என் உயிருக்குள்,
சுடராய் என் இதயத்தில்
எரிந்தவள் நீ...!

என் கவிதைகளுக்கும்,
உன் மவுனங்களில்
வார்த்தைகளை தந்தவள் நீ...!

இன்று ஏனடி நீ
என் இதயத்தை
சில்லாய் நொறுக்கிப்போகிறாய்...?

உயிருக்குள்
உனை வைத்தேன்...!
நீ ஏனடி - என் உயிரை
முள்ளாய் தைக்கிறாய்...?

என் கண்ணீரை - நீ
துடைப்பாய் என்றிருந்தேன்...!
நீ ஏனடி
என் கண்ணீர் மழை கண்டு
குடை பிடிக்கிறாய்...!!

என் வலிகளுக்கு கூட
நீதான் அழுதிருக்கிறாய்...!
இன்று நானோ அழுகிறேன்...!!
உன் இதயம் வலிக்கவில்லையா...?

என் உணர்வுகளும்,
நான் கொண்ட காதலும்
நீ விளையாடும்
பொம்மையானது ஏனோ...?
உன் காதல் - வெறும்
பொய் தானோ...?

காதல் பாஷை
கற்றுத் தந்தாய்...!
காற்றின் ஓசையிலும்
காதல் இசை மீட்டிச்சென்றாய்...!!
அவை கூட வெறும்
பொய் வேஷம் தானோ...?

நான் தூங்க
உன் இமை கேட்டேன்...!
நான் வாழ - உன்
இதயம் கேட்டேன்...!!
மறுத்திருந்தால் கூட
மன்னித்திருப்பேன்...!!!

ஆனால் நீயோ
தந்துவிட்டு ஏனடி
திருப்பிக்கேட்கிறாய்...?
பாதி பயணத்தில் ஏனடி
திரும்பிப்போகிறாய்...?

இப்போதோ உன்னை
மன்னிக்க மறுக்கிறதுதடி - என்
மனது...!

உடைப்பதுதான்
உனக்கு பிடிக்குமா...?
என் இதயமும்,
உன் சத்தியங்களும்
சில்லாய் சிதறி கிடக்கின்றன...!

பொய் காரணங்கள்
போதுமடி எனக்கு...!
மனமிருந்தால் இங்கு
மாற்கங்களும் உண்டு...!!

என் காதலை தவிர
என்னிடம் எதுவுமில்லை...!
உன்னிடம் தர...
இதனால்தான்
இப்போது விலகி செல்கிறாயா...?

இரக்கமில்லாதவளா நீ...?

நீ என்னை
ஏமாற்றவில்லை...!
நான் தான் உன்னிடம்
ஏமாந்து போனேன்...!!

உன்
வார்த்தை காதலால்
வலிபட்டு நிற்கிறேன்...!

வார்த்தையில் இல்லையடி காதல்...!
காதலுக்காய்
வாழ்ந்துகாட்டுவதில்தான்
வாழ்கிறது உண்மை காதல்...!!

தவறுகளை கூட
மன்னித்துவிடலாம்...!
ஆனால் பாவங்கள்
தண்டிக்கப்பட வேண்டும்...!!

என்றாவது ஒருநாள்
என் நினைவுகள்
உன் இதயத்தில் வரும்போது
உன் கண்கள் சிந்தும்
அந்த ஒருதுளி
கண்ணீர் துளியும்
உனக்கு தண்டனையே...

-----அனீஷ்...

 

9 Dec 2010

செல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்?

செல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்?


இதழ்கள் இல்லாமல் இசைக்கிறாய்...!
நீ இதயத்தின் ஓசையா...?
காதோடு தினம் பேசினாய்...!!
நீ அறிவியலின் பாஷையா...??

கைக்குள்ளே அடங்கினாய்...!
நீ ஹைக்கூ கவிதையா...?
கண்களுக்கு அதிசயமானாய்...!!
நீ காலம் சொல்லும் கதையா...??

விரல் நுனியில் விழிக்கிறாய்...!
நீ விஞ்ஞான வித்தையா...?
குட்டி கடிதம் சுமக்கிறாய்...!!
நீ மின்சார வார்த்தையா...??

உலகத்தை உன் கையில் ஏந்தினாய்...!
நீ ஹெர்குலஸ் சிலையா...?
உலகத்தை நீயே ஆள்கிறாய்...!!
நீ கடவுள் அறியாத கலையா...??

காற்றோடு குரலை கலக்கிறாய்...!
காசு தீர்ந்தால் கசக்கிறாய்...!!
ரீ-சார்ஜ் செய்தால் மீண்டும் பிறக்கிறாய்...!
ரிங்டோனாய் காற்றில் பறக்கிறாய்...!
செல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்
செல்போனே...

-----அனீஷ்...

5 Dec 2010

இதயம் தந்தால்

இதயம் தந்தால்


அன்பே! நீ
பார்த்து நின்றால்
சூரியன் கூட
எரிவதை மறக்கும்...!!

சிலையே! நீ
சிரித்துச் சென்றால்
மடிந்த மலர்களும்
மறுபடி உயிர்க்கும்...!!

பெண்ணே! நீ
பேசிச் சென்றால்
சங்கீதம் உன்னிடம்
சரிகம கற்க்கும்...!!

உயிரே! நீ
உன் பெயரை தந்தால்
ஒற்றை சொல்லில்
ஒரு கவிதை கிடைக்கும்...!!

கண்ணே! உன்
கால்கள் பட்டால்
கடற்கரை மணலும்
கல்வெட்டாகும்...!

என் இதயமே! நீ
உன் இதயம் தந்தால்
பூமியில் எனக்காய்
புதிய சொர்க்கம் பிறக்கும்...!!

----அனீஷ்...