12 Jan 2011

உயிரில் கலந்தவன் நீ...


அன்பே...
எண்ணிலடங்கா
என் அணுக்கள்
ஒவ்வொன்றிலும்
ஒன்றாய் கலந்தவன் நீ...!

சிரிப்பை தந்தவனும் நீதான்...!
என்னை ரசித்து நின்றவனும் நீதான்...!!
என் உயிரில் கலந்தவனும் நீதான்...!
என்னை அன்பில் கரைத்தவனும் நீதான்...!

நான் என்னை பார்க்கும்
கண்ணாடியாய் நீ இருக்க,
என் இதயம் முழுவதும்
உன் பிம்பங்களே...

நீ எனக்காய் எழுதும்
எல்லா கவிதைகளிலும்,
வரிகளை விட
உன் காதலைத் தான்
அதிகம் ரசிக்கிறேன் நான்...!

நீ என்னை தொட்டுப் பறிக்க
எனக்காய் எல்லாம் விட்டுக்கொடுக்க
கட்டுப்பட்டு போகிறேன் நான்...!
உன் கட்டுப்பாடற்ற அன்புக்குள்...

முத்தத் தீண்டல் - உன்
எல்லைத் தாண்டல் என
கொண்டாட்டப் பொழுதுகளில்
திண்டாடிப் போகிறேன் நான்...!

உன் அணைப்புகளில்
எனக்கே தெரியாமல்
பிணைக்கைதியாய்
உன்னிடம்
சரணடைந்துவிடுகிறேன் நான்...!

சமயலறையில்
சத்தமில்லாமல் பின்னாலிருந்து
கட்டியணைத்து - என்
கன்னத்தோடு -நீ
கதை சொல்லும் போது
அடுப்பை விடவும்
அதிகமாய் சூடாகிறேன் நான்...!!

உன்னோடு நான் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்,
ஆயிர ஜென்ம சந்தோஷங்களை
அள்ளித் தருகிறது எனக்கு...

உன் அன்புக்கு முன்னால்
ஆகாயமும் சிறியதாக,
உன் பாசத்தில் நான்
பனியாகி உருகிப்போகிறேன்...!

நானோ உன்னை - என்
இதயத்தில் மட்டும் சுமக்க,
நீயோ என்னை
இதயத்திலும் - உன்
இரண்டு கைகளிலுமாய்
சுமந்து செல்கிறாய்...

என்னை
அளவுக்கதிகமாய் நேசிக்கும்
உன்னைவிட,
உன்னை அதிகமாய் நான்
நேசித்துக்கொண்டிருப்பேன்...!
என் இதயத்துடிப்பு
முடியும் வரை...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

4 comments:

  1. supera ezhuthirukurel anish. good

    ReplyDelete
  2. oru ponnuku evvelavu anbu kidaital aval very lucky tan. anish itu sonta anubava? aar ungalukaka inta kavitai elutinanga?

    ReplyDelete
  3. மிக நன்றாக இருக்கு.

    ReplyDelete