6 Oct 2011

காதல் கடிதம் !


உன்னை கண்டதும் - என்
உதடுகளுக்குள்
உயிர்விடும் வார்த்தைகளை - நான்
கைகளால் கிறுக்க நினைத்து,
கடைசியில் மிஞ்சியது - இந்த
கடிதம் மட்டுமே...!

இப்பொழுதெல்லாம்
நீ என்
எதிரில் வரும்போதெல்லாம்,
ஏதேதோ ஆகிறது...!
என் இதயம்...

ஒவ்வொரு இரவும்
ஓராயிரம் வருடங்களாய்
நீள்வது போல்
ஒரு உணர்வு...!

என் கனவுகளின்
கடைசி நுனிவரை நுழைந்து,
தினவும் உன்னைத்தான்
தேடி அலைகிறேன் நான்...!

உனக்காகவே வாழலாம் என்றும்,
உனக்காகவே சாகலாம் என்று
உரக்க கத்துகிறது...!
என் மனது...

உனக்காய் காத்திருப்பது,
காற்றில் பறப்பதை விட
சுகமாய் இருக்கிறது...!

உன்னை காதலித்தே
காலந்தள்ளிக்கொண்டிருக்கிறேன் நான்...!

நீயும் என்னை
காதலிக்கிறாயென்றால்,
உன் இதயம் கொடு...!
இல்லையென்றால்
எனக்கொரு பதில் போடு...!!
இன்னொரு கடிதம்
எழுத வேண்டும் நான்...!
உன் இதயம் வேண்டி...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

12 comments:

  1. இன்னொரு கடிதம் எழுதவேண்டும் உன் இதயம் வேண்டி..............
    உங்கள் அடுத்த கவிதைகுக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. இன்னுமா காதல் கடிதம் எழுதுவதை நிறுத்தவில்லை கவிக்கா?:)))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  3. @அம்பலத்தார்:நன்றி! நன்றி !! :)

    ReplyDelete
  4. @athira:காதல் கடிதம் மட்டுமில்லை வேறயும் நிறைய எழுதுறேன்...! நீங்கதான் இங்கெல்லாம் வர்றதே இல்லையே.. :(
    ஹ்ம்ம் இப்போவாவது வந்தீங்களே அதுக்கு ரொம்ப நன்றி.. :) :)

    ReplyDelete
  5. nalla irukku boss kavithai ,,,,

    vazththukkal......

    letter lam vaenam boss .....pazhaiya kalaththula irukkinga ... purath thoothu try panni paarungalae work out aagalam anishj....................

    ReplyDelete
  6. @Anonymous: புறா துதா? அது உங்க காலத்து டெக்னிக் ஆச்சே...? ;)
    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...! :)

    ReplyDelete
  7. ezhuthu nadai nalla erukku kavithai super

    ReplyDelete
  8. @kalpana: வாங்க கல்பனா... :)

    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  9. hmm ninga vanga nu invite pannarela good kavithai nalla eruku ani

    ReplyDelete
  10. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!! :)

    ReplyDelete
  11. அருமை ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  12. @தமிழ்த்தோட்டம்: வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete