21 Oct 2011

இரட்டை துண்டு இதயம் !


உன்னை நானும்,
என்னை நீயும் சுமக்கும்
ஒற்றை இதயத்துடன்
ஒரே பாதையில் பயணித்தது...!
நம் காதல்...

சிரிப்பதற்கு காரணங்களையும்,
அழுவதற்கு தோள்களையும்
பங்கிட்டுக்கொண்டோம் நாம்...!

எல்லையில்லா சந்தோஷங்களே
நமது எல்லையானது...!

எதோ ஒரு நொடியில்
நமக்குள் ஒரு பிளவு...!

வழிமாறியது பயணம்...!

இன்றோ உடைந்துபோன
இரண்டை துண்டு இதயத்துடன்,
ஒரே பாதையின்
இரு பக்கங்களிலுமாய் நாம்...!
ஆனால் பாதையோ
பிரிந்துகிடக்கிறது...!
என்றுமே ஒன்றுசேர முடியாத
தண்டவாளம் போல...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

6 comments:

  1. nice,,,,nalla irkku anish,,,

    ReplyDelete
  2. neraiya kadhal neenga sonna mari sera mudiyadha thandavalangal dhan..... u have expressed that very well in this poem.

    ReplyDelete
  3. @Anonymous: நன்றி ! :)

    ReplyDelete
  4. @shamilipal: உண்மைதான்... !! உங்க கருத்துக்கு நன்றி ! :)

    ReplyDelete
  5. ஒவ்வொரு வரியும் படிக்கும் பொழுது மனச கொல்றிங்க சிரிப்பதற்கும் முதல் கடைசி வரைக்கும் அற்புதமா வரிகள்..

    ReplyDelete
  6. @kilora: ஓஓ அப்படியா? ;) கருத்துக்கு ரொம்ப நன்றி !! :)

    ReplyDelete