31 Oct 2011

மழை நனைகிறது...


ஒற்றைகுடையில்
கொட்டும் மழையில்
நம் நடை பயணம்...!

உன் தேகம் உரசலில்,
மழைக் குளிரிலும் - என்
மனசு சூடாகிக்கொண்டிருந்தது...!

உன்னிடம்
முத்தமொன்று கேட்கச்சொல்லி,
மனசு என்னிடம்
யுத்தம் செய்ய தொடங்கியது...!

கேட்டால் நீ மறுக்கலாம்...!
ஒருவேளை,
முறைக்கவும் செய்யலாம்...!

உன்னிடம் நான்
ஒரு முத்தம் தா என்றதும்,
சத்தமில்லாத வெட்கப்புன்னகை
உன் முகத்தில்பட்டு தெறித்தது...!

இதழ் விரித்து,
குடை மறைத்து
ஒரு முத்தம் தந்தாய் நீ...!

நம் காதல் மழை கொட்ட,
உன் முத்தத்தின் ஈரம் சொட்ட,
குடையில்லாமல்
மழை நனைந்துகொண்டிருந்தது...!

----அனீஷ் ஜெ...

SHARE THIS

12 comments:

  1. mmmm...........superb....superb..superb....
    anishj romba romantic aa irukku ....mmmm....kalakkunga.....
    ithal virithu ,kudai maraithu acchooooo achoooo....
    anishju unga oorula mazhaiyam la ...appadina xperince kavithai thanaa....kandupidichitom laa...naangallam yaru...yaru....
    thala mmm..mhum...mm..mhummmmmm ,,,,enjoy boss ...enjoy.....

    ReplyDelete
  2. அனிஷ் ஏன் இப்படி.. romance மூட்ல எழுத்து இருக்கீங்க .. யார் அந்த அதிஷ்டசாலி.. ஒவ்வொரு தடவையும் கவிதை different .. அண்ட் ரொம்ப ரசிச்சி எழுதுறிங்க theriyuthu.. super.. super.. ரொம்ப நல்லா இருக்கு... இப்ப அங்க மழையா .. cheri cheri .. enjoy..:B :B :B

    ReplyDelete
  3. @Anonymous: ஆமா எங்க ஊருல நல்ல மழைதான்...! ஏன்னா நல்லவங்க இருக்குற இடத்தில மழை பெய்யும் & எனக்கு தெரியும் ஒரிசால கொஞ்சம் கூட மழை இல்லைனு... =))=))
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  4. @kilora: நல்லவேளை நீங்களாவது அனுபவிச்சு எழுதாம, ரசிச்சி எழுதுறேன் சொன்னீங்களே...! அதுவரைக்கும் ரொம்ப சந்தோசம் ;)
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  5. hey its very surprising to me...
    how can u say tht i am in odisha,,,
    thats correct man....
    hey i just applied for ration cared ...aftergetting my card as per ur wish i ll use the ration card name ..aha haaa haaaa...

    ReplyDelete
  6. என்ன அடிக்கடி காதல்சுவை நிறைந்தகவிதைகளாகவே வந்திட்டிருக்கு?
    அடிக்கடி நனையாதையுங்கோ ஜலதோசம் பிடிச்சிடும். நல்ல கவிதை.

    ReplyDelete
  7. வணக்கம் நண்பரே..

    முதல் வருகை..

    கவிதை வெகுஅழகு..

    நன்றி
    சம்பத்குமார்
    www.tamilparents.com

    ReplyDelete
  8. @Anonymous: உங்க அண்ணா பெயர் “பீட்டரா”? ரேசன் கார்டில் அவர் பெயரையும் சேர்த்துக்கோங்கோ... ;)
    வருகைக்கு நன்றி...! :)

    ReplyDelete
  9. @அம்பலத்தார்: ஹாஹா இனிமே நனையாம இருக்க முயற்சி பண்றேன் நண்பரே... ;)
    வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...! :)

    ReplyDelete
  10. தலைப்பு படு கலக்கல்...

    அது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதால்...அந்த உணர்வு மறுபடி வர கடைசி ச்டான்சா வரை காத்திருக்க வேண்டி உள்ளது...

    இதே தவறை நானும் செய்வேன்...

    பிடித்தது நண்பரே...பொருத்தமாய் படமும்...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. @சம்பத் குமார்: முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...! :)

    ReplyDelete
  12. @ரெவெரி: ஹ்ம்ம்ம்... படத்துக்கு பொருத்தமாய் எழுதிய கவிதை இது... :)
    வருகைக்கும், உங்கள் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே...! :)

    ReplyDelete