9 Nov 2011

மறந்துவிட சொன்னவளுக்கு...


நீ மறந்துவிட சொன்ன நொடியின்,
மரண வலியின் நினைவுகளுடன்
இன்னும் நான்...!

உன் ஞாபகங்களை
உதறித்தள்ள நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும் - நான் தான்
ஒரேயடியாய் தோற்றுப்போகிறேன்...!

உன்னை மறப்பதற்காக - நான் உன்னை
நினைக்க மறுக்கும் நிமிடங்களில்,
ஆக்ஸிஜனில் கூட
அமிலத்தை உணர்கிறேன்...!

இமைகளை
இறுக்கி அடைத்தாலும்,
இதயத்தை
இரண்டு துண்டாய் உடைத்தாலும்
நீ தான் தெரிகிறாய்...!

மறந்துவிட சொன்னவளே - என்னை
மன்னித்துவிடு...!
கடைசியாய் நீ என்னிடம்
விரும்பிக்கேட்டதை - நான்
விரும்பினால் கூட - என்னால்
நிறைவேற்ற முடியாது...!

ஏனென்றால்...
உன்னை நான்
மறப்பதென்பது - நான்
இறக்கும்வரை சாத்தியமில்லை...!

----அனீஷ் ஜெ...
SHARE THIS

18 comments:

  1. ஆக்ஸிஜனில் கூட அமிலத்தை உணர்கிறேன் - செம செம சூப்பர்.

    ReplyDelete
  2. கவிக்கா... கவிதை இதயத்தை ட்ச்ச்சூஊஊஊஊ பண்ணுகிறது.... உணர்வுபூர்வமாக இருக்கு.... சோ...சாட்ட்ட்ட்ட்:((

    ReplyDelete
  3. oxygenil kuda amilam ??? anish romba feel panna vachchittinga ...anish romba romba manasu kanaththu poga vachchittinga...suberbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

    ReplyDelete
  4. எப்படி தான் இப்படி எல்லாம் எழுதுரின்களோ.. அனுபவமா.. தெரியுது.. அது கொடும தான் உங்க லவர் இப்படி இருந்து இருக்க கூடாது .. மறந்து விட சொன்ன மறந்துடுவிங்கள.. truely ungala yen pakala நான்.. valkkai muluvathum nanbiya enna ethupingala..:Q :Q

    ReplyDelete
  5. @விச்சு: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...! :)

    ReplyDelete
  6. @athira: ஆ... வழி தெரியாம இங்க வந்திட்டீங்களோ... :)
    வந்தமைக்கும், கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி...!!:):)

    ReplyDelete
  7. @kalai: சரி சரி இதுக்குலாம் feeeeeeeeeeeeeeeeel பண்ணாதீங்க.. :) be happy :D
    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி கலை...! :)

    ReplyDelete
  8. @kilora: ”நல்ல நட்புகளுக்காக” என் இதய வீடு எப்போதும் திறந்தே இருக்கும்...! அட அதுக்காக செருப்புலாம் கழட்டாதீங்க.. ஐ மீன் நட்போடு இதய வீட்டுக்குள்ள வறதுக்கு செருப்ப கழட்ட வேணாம் சொன்னேன்... :R:R
    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி... :)

    ReplyDelete
  9. @சீனுவாசன்.கு: வந்தமைக்கும், வருத்தப்பட்டமைக்கும் மிக்க நன்றி ஐயா...! :) =))=))
    மீண்டும் வருக...! :)

    ReplyDelete
  10. :)அருமையான வரிகள் அழகாக இருக்கு

    ReplyDelete
  11. :((((((((((((((((

    ReplyDelete
  12. பிரிவே மிகப்பெரிய வலி ..
    அதில் மறந்து விட சொன்னால் அதன் வலியை எப்படி கூறுவது ...

    தல கவிதை அசத்தல் ...

    ReplyDelete
  13. @சிநேகிதி: வாங்க சிநேகிதி...! உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  14. @anishka nathan: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  15. @அரசன்: உண்மைதான் தல... அந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது :(
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...!

    ReplyDelete
  16. மறந்து விட சொன்னவளுக்கு ..கவிதை ..

    நினைத்தவளை மறப்பதற்கு அவ்வளவு

    கஷ்டமா ?

    BY

    LIVINA

    ReplyDelete
  17. @livina: சே சே அவ்வளவு கஷ்டம் எல்லாம் இல்லீங்க...! ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete