16 Nov 2011

நான் உன்னை நம்புகிறேன்...


இமை மூடினாலும்,
கனவில் தேடினாலும்
காண்பது உன் முகமே என்கிறாள்...!

உனை பிரிந்தால்
உயிர் பிரியுமென
ஏதேதோ உளறுகிறாள்...!

யார் எதிர்த்தாலும்,
காதலை எதிர்த்து
போர் தொடுத்தாலும்,
உன்னிடமே கைதியாவேன் என
வசனம் பேசுகிறாள்...!

ஆயுள் முடியும் வரை கூட
அன்பே உனக்காய் காத்திருப்பேன் என
அடிக்கடி சொல்கிறாள்...!

தூக்கத்தை
தொலைத்தேன் என்கிறாள்...!
தூரத்திலிருந்தாலும்
நினைப்பேன் என்கிறாள்...!!

அவள் என்னிடம் சொல்லும்
அத்தனையும்
பொய்யென தெரிந்தும்,
அவளிடம் நான்
ஒற்றை பொய் மட்டுமே சொல்கிறேன்...!

“நான் உன்னை நம்புகிறேன்...”

----அனீஷ் ஜெ...
SHARE THIS

18 comments:

  1. கவிக்காமாதிரி, கண்ணை மூடிக்கொண்டே குழியில விழுவேன் என சொல்லும் ஆட்க/ள் இருக்கும்வரை... இந்தப் பொய்யான அன்பும் தொடரத்தான் செய்யுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))..

    ஆனாலும் கவிதை சூப்பர்.

    ReplyDelete
  2. அருமையான படைப்பு
    ஒரு அடி என்றாலும் நெத்தியடி என்பதைப் போல
    ஒரே ஒரு பொய் என்றாலும் சூப்பர் பொய் அல்லவா
    காதல் நெருப்புக்கு பொய்தானே நெய்.
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @athira: ஹாஹா... இந்த “பொய்யான அன்பு” என்கிற வார்த்தையை ஒருத்தராவது பயன்படுத்துவாங்க நினைச்சேன்...! :(
    அதென்ன என்னை மாதிரி கண்ணை மூடிக்கொண்டு குழியில் விழுறது...! நான் கண்ணை திறந்துகொண்டு கூட விழுவேன்...! =))
    ஹ்ம்ம்ம் ஒருத்தர் கவிதை எழுதினாலே(குறிப்பா காதல் கவிதை), அந்த கவிதையில் சொல்லப்பட்டிருக்குற விடயங்கள் கவிதை எழுதியவர் சம்மந்தப்பட்டதுனு ஏன் நினைச்சுக்குறீங்க... :A:A:A:A:A

    ஆனாலும் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிங்க...! :)

    ReplyDelete
  4. @Ramani: ஹ்ம்ம்ம்... பொய் சொல்றவங்க கிட்ட திருப்பி சொல்லும் பொய் இதுபோன்ற பொய்யாக இருந்தால் அது சூப்பராத்தான் இருக்கும்...! இது காதலுக்கு மட்டுமல்ல... எல்லாத்துக்கும் பொருந்தும்...! :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  5. itu enna poi kavithaiyaa ?/Z?poi paesuriyaa ,poison kudikkiriyaa kettaa naan lam poison kudichchiruvaenakkum .... ,,,,

    poyyai anish poiyyana nabarukku poi poiyyaa ezthuna kavithai poiya nalla illai endru solluren....

    kavithai superb,,,

    ReplyDelete
  6. @kalai: //itu enna poi kavithaiyaa //
    கவிதைனாலே பொய்தான்... ;);)

    //poi paesuriyaa ,poison kudikkiriyaa kettaa naan lam poison kudichchiruvaenakkum ....//
    ஏங்க இப்படி பொய் சொல்றீங்க...? :R:R:R:R:R

    //poyyai anish poiyyana nabarukku poi poiyyaa ezthuna kavithai poiya nalla illai endru solluren.... //
    பொய் சொல்லலையே...! :Y:Y

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  7. குட்டியாக ஒரு பொய்...ரசித்தேன்...

    ReplyDelete
  8. @ரெவெரி: வ்ந்தமைக்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே...! :)

    ReplyDelete
  9. கடைசி வரியில வலி தெரிகிறது அதிகம்

    ReplyDelete
  10. @kavitha: ஹ்ம்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிங்க...! :)

    ReplyDelete
  11. அருமை பாராட்டுக்கள் நண்பரே உங்களின் படைப்புகளை நமது தோட்டத்திலும் பூக்கவிடுங்களேன்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  12. @தமிழ்தோட்டம்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தலிவா...!

    ReplyDelete
  13. இது யாருக்கோ அறிவித்த அறிவிப்பு மாதிரி உள்ளது தல ...
    இருந்தும் வரிகளில் நளினங்கள் நிறையவே உள்ளது ..
    வாழ்த்துக்கள் தல ..

    ReplyDelete
  14. @அரசன்: ஹாஹா இந்த அறிவிப்பு குறிப்பிட்டா யாருக்கும் அல்ல தல...! காதலிப்பதாய் நடித்துக்கொண்டிருக்கும் பெண்கள் எல்லாருக்கும்...

    நான் என்ன சொல்ல வர்றேன்னா, பெண்களை விட ஆண்கள் புத்திசாலிகள் என்பதை பல சமயங்களில் பெண்கள் மறந்துவிடுகிறார்கள்...! யாரை ஏமாற்றிக்கொண்டிருப்பதாய் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களிடம் இவர்கள் ஏமாந்துக்கொண்டிருப்பார்கள் ;);)
    அதைதான் இந்த கவிதையில் சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன்...! ;);)

    உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல...!

    ReplyDelete
  15. anish manaporvama solravangala yen ippadi kindal panringa.. unmaiya irukaratha manathara ethuka parunga.. sariya.. varthaila namburen soli avanga manasa neenga eppadi kayapaduthuringa theriyutha.. fantastic lines anish.. super super.. super..:p :p

    ReplyDelete
  16. @kilora: நான் யாரையும் கிண்டல் பண்ணவில்லை...! உண்மையா இருக்குறவங்களை ஏத்துக்க கூடாதுனு நான் சொல்லலை...!
    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  17. ninga poi solluvella?????

    ReplyDelete
  18. @anishka nathan: நீங்க என்ன நினைக்குறீங்க?

    வருகைக்கும், கேள்விக்கும் மிக்க நன்றி...!!!

    ReplyDelete