31 May 2012

உன் மனம் அறிய ஆவல்...


உன் வானவில் பார்வையில்
என் இதயம் இப்போது
வளைவது போல் உணர்கிறேன்...!

பிரபஞ்சத்தின் அணுக்களெல்லாம்
உன் முக பிம்பங்கங்களையே
பிரதிபலிப்பது போல் காண்கிறேன்...!

என் தூக்கங்களை
தூக்கி சாப்பிடும்
உன் நினைவுகளோ,
என்னையும் இப்பொழுது
கொஞ்சம் கொஞ்சமாய்
கொன்று தின்கிறது...!

என் இரத்த நாணங்களில் கூட
உன் நாணம் பூசிய
சிணுங்கல் சிரிப்பே
நிரம்பி வழிகிறது...!

மறைத்து வைத்திருந்த - என்
மனக்கூட்டிலிருந்து
உரக்க கத்துகிறது...!
உனக்கான என் காதல்...

சத்தம் கேட்டதும்,
திரும்பி பார்ப்பாயா..?
விருப்பம் கொள்வாயா...??

காத்திருக்கிறேன் நான்...!

உன் மனம் அறிய ஆவல்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

11 comments:

  1. பதிவின் தலைப்பே மிக ரசனையாய்...

    ReplyDelete
  2. மறைத்து வைத்திருக்கும் மனக்கூட்டிலிருந்து உரக்கக் கத்தும் காதல்...

    திரும்பிப் பார்க்க வைக்கிறது...
    திரும்பத் திரும்ப படிக்கவும்தான்....

    ReplyDelete
  3. anishka nathanJune 01, 2012 3:21 pm

    puriyaliye:(

    ReplyDelete
  4. //என் தூக்கங்களைத்
    தூக்கிச் சாப்பிடும்
    உன் நினைவுகளோ
    என்னையும் இப்பொழுது
    கொஞ்சம் கொஞ்சமாய்
    கொன்று தின்கிறது//

    காதல்ல இதெல்லாம் சகஜமப்பா...அருமையான உணர்வு.வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  5. @சிசு: வாங்க சிசு...! ரொம்பபபபப நாள் கழித்து பார்க்கிறேன்...! நலமா?

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...! :)

    ReplyDelete
  6. @anishka nathan: இன்னொருவாட்டி நல்லா படிங்க... புரியும்.....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  7. @சித்தாரா மகேஷ்.: ஆஆ... நீங்க சொன்னா சரிங்க... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. yarudaya manathai ariya intha kavithai?

    propose pandrathuku itha use panikilamnu nenikairen!

    nala iruku frnd

    ReplyDelete
  9. @saranya: அட propose பண்றதுக்கு இந்த கவிதையை யூஸ் பண்ண போறீங்களா? ஹம்ம்ம் அப்படின்னா அங்காங்கே மானே தேனே பொன்மானே’னு போட்டுக்கோங்க... அப்போதான் சுட்ட கவிதைனு, நீங்க propose பண்ண போற பையன் கண்டுபிடிக்க மாட்டான்... ;);)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!!!

    ReplyDelete
  10. super anish.. puthiya konathil supera iruku kavithai.. heading super.. last few lines supero super.. athu enna thirumbi pakka vaikirathu.. pakka mattum thana eppo solluvinga nu than theriyala antha ponnu kitta.. nice feelings anish..

    ReplyDelete
  11. @kilora: முதல்ல பார்ப்போம்... பார்க்க பார்க்க தானே பிடிக்கும்.... அப்புறம் சொல்லிக்கலாம்....! ;)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... :)

    ReplyDelete