3 Jun 2012

நீ வர வேண்டும்...


என் தெருவோரம்
எப்போதாவது
வருகிறாய் நீ...!

மழை வரும் நாட்களில்
மண்ணில் முளைக்கும்
காளான்கள் போல,
நீ வரும் நாட்களில்
என்னில் முளைக்கிறது
ஏதோ புதுவித உணர்வு...!

நீ வரும் வழியில் காத்திருந்து,
என் விழியெனும் ஜன்னலை திறந்து
காண்கிறேன் நான் உன்னை....

நீ பார்வை கோலமிட்ட
என் மன வாசலில்,
புள்ளிகள் கூட இப்போது
பூ பூத்து கிடக்கின்றன....!

ஒவ்வொரு முறையும்
ஓரப்பார்வை வீசி - நீ
என்னை தாண்டி செல்லும்போதும்,
இழுத்து மூடியிருந்த - என்
இதயக்கதவை திறந்துவிடுகிறேன்...!
என் இதயத்திற்குள்
நிரந்தரமாய் குடியேற
நீ வர வேண்டும் என...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

14 comments:

  1. நீ வர வேண்டும்....///

    யேஸ்ஸ்ஸ்ஸ்.. கவிக்கா வரவேண்டும் என்றுதான் நாங்க காத்திருக்கிறோம்.. எங்க அடிகடி(க்க):) காணாமல் போயிடுறீங்க....

    ஆனா எங்க போனாலும் கவிதை மட்டும் ஒழுங்கா வருது...

    ReplyDelete
  2. கவனம் இதயக்கதவை ஆருக்கோ திறந்து விட, திறந்துதானே இருக்கென வேற ஆரும் உள்ளே வந்திடப்போகினம்... கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டிருங்க...:R:R:R:R

    ReplyDelete
  3. ADA KAVITHAI!


    RASANAI NANPAA!

    ReplyDelete
  4. @athira: //யேஸ்ஸ்ஸ்ஸ்.. கவிக்கா வரவேண்டும் என்றுதான் நாங்க காத்திருக்கிறோம்.. எங்க அடிகடி(க்க):) காணாமல் போயிடுறீங்க....//
    Hmmm... காத்திருக்க வைக்காமல் ஆங்காங்கே அடிக்கடி தலை காட்டணும்’னு தான் நானும் நினைக்கிறேன்....! ஆனா முடியல...! இனிமே அடிக்கடி வரேன்...! :):)

    //ஆனா எங்க போனாலும் கவிதை மட்டும் ஒழுங்கா வருது...//
    கவிதை கூட இப்போ எல்லாம் ஒழுங்கா வரதில்லையே... :Y:Y
    கடந்த 5 மாதங்களில் வெறும் 9 கவிதைகள் தானே வந்திருக்கு... :(( :((


    //கவனம் இதயக்கதவை ஆருக்கோ திறந்து விட, திறந்துதானே இருக்கென வேற ஆரும் உள்ளே வந்திடப்போகினம்... கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டிருங்க...:R:R:R:R//
    ஹாஹா யாருமே வராம இருக்குறதுக்கு, யாராவது வந்தால் அதுவும் நல்லது தானே... :R:R:R:R:R

    வந்தமைக்கும், கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி... :)

    ReplyDelete
  5. @Seeni: வாங்க வாங்க நண்பா....

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.... :)

    ReplyDelete
  6. anishka nathanJune 05, 2012 4:59 pm

    nice poem but nothing is permanent in this world time season age all moves on.......even love too.....after sometime no body remember

    ReplyDelete
  7. @anishka nathan: ”அன்பு” நிரந்தரமில்லை’னு நீங்க சொல்றது என்னால ஏற்றுக்கொள்ள முடியாது...! அது உங்களுக்கு வேணும்னா ஒத்துப்போகலாம்...! உங்க அன்பு temporary’na , உங்க அன்பை கொடுக்கிற மாதிரி கொடுத்து யாரையும் ஏமாற்றிடாதீங்க...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  8. @Yoga.S.: வாங்க வாங்க...

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  9. kadliyin varukaiyai ethir parthu irukum kavithai,

    ethir parubu ematramal irukum varai nalathu,

    ennathi sariyai velipadutharinga frnd,nice

    ReplyDelete
  10. romba katthu irukanthinga anish .. super anish .. ippa vara kavithaigal ellam etho kavi anish love panranga nu solluthu.. yarko kathu irukanga nu.. sariya.. cheri cheri nallathu nadantha sari.. nice feelings.. wonderful.. super.. ;) :) ;)

    ReplyDelete
  11. @saranya:

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  12. @kilora: நல்லதே நடக்கும்... :)

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  13. Čhøčø Šťyliśh ĶãmãřMarch 20, 2017 11:14 am

    Nice lines solrathuku vaarthai ella Beautiful

    ReplyDelete