11 Sept 2012

காதல் தோல்வி !


என் இமைகளை கடந்து
கண்ணீராய் வழிந்தோடும்
உன் நினைவுகளை,
உயிருக்குள் அடக்கிவைத்து
ஊமையாக அழுகிறேன்...!

என் இதயத்தை கிழித்துகொண்டு
வலிகளாய் கசிந்தோடும் - என்
காதல் குருதியை
நெஞ்சோடு மறைத்துவைத்து
செந்தீயில் வேகிறேன்...!

உன் ஞாபகங்களை சுவாசித்து,
உறங்காமல் உனையே யோசித்து,
காதலோடு காலந்தள்ளி,
நீ தந்த வலிகளை ஜெயித்தே
இன்னும் உயிர்வாழ்கிறேன் நான்...!
யாரோ சொல்கிறார்கள்
எனக்கு காதல் தோல்வியாம்...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

13 comments:

  1. வலியின் வேதனையை
    இதைவிட வலிமையாய் சொல்லமுடியாது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு! நன்றி!
    இன்று என் தளத்தில்
    ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html



    ReplyDelete
  3. வலிதான் வாழ்க்கையை உணர்த்துகிறது தல ..
    அதுவும் காதலின் வலி சொல்லவே வேண்டாம் ..
    நல்ல வரிகளை தொடுத்து அழகிய கவிதை படைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தல ...

    அந்த படம் எங்கிருந்து எடுத்திங்க தல .. அட்டகாசம் .. ஹி ஹி

    ReplyDelete
  4. என்னாது? காதலில் தோல்வியா? அவ்வ்வ்வ் எத்தனையாவது காதலில்?:R:R:R:R.

    அந்தப் படம் பார்க்க என்னவோ செய்யுது கவிக்கா, கஸ்டமாக இருக்கு.... இனிமேல் இப்படிப் படம் போடாதீங்க.. பிளீஸ்ஸ்.

    ReplyDelete
  5. @Ramani: வாங்க ஐயா...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  6. @s suresh: வாங்க நண்பா...

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  7. @அரசன் சே: வாங்க தல....

    ”காதல் காயம்”(ஆங்கிலத்தில்) என கூகுளில் தேடினேன்... கிடைத்தது... ஆனால் இந்த படம் இந்த கவிதைக்கு தவறான தேர்வு என இப்பொழுது நினைக்கிறேன்.. :(

    வருகைக்கும், வாழ்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  8. @athira: //என்னாது? காதலில் தோல்வியா? அவ்வ்வ்வ் எத்தனையாவது காதலில்?:R:R:R:R. //
    ஹாஹா... இன்னா இவ்வளவு கரீட்டா கண்டுபுடிச்சிருக்கீங்கோ..... ;) :R:R

    //அந்தப் படம் பார்க்க என்னவோ செய்யுது கவிக்கா, கஸ்டமாக இருக்கு.... இனிமேல் இப்படிப் படம் போடாதீங்க.. பிளீஸ்ஸ்.//
    மன்னித்துக்கொள்ளுங்கள்... இனிமேல் இதுபோன்ற மனதை கஸ்டப்படுத்துகிற படங்கள் போடமாட்டேன்... இதுபோன்ற படங்கள் ஏன் போட கூடாது என புரியவைத்தமைக்கும் நன்றி...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...!

    ReplyDelete
  9. anish manasa ala vaika thondiya ungal valigalil varigal arumaiyana padaipu.. anish . varthaiyil nalla iruku solla vittu marrakka mudiyatha varigal.. anish ungala kavijaraga enkalugu arimugam seitha antha rasigai aayiram kodi nandri..

    ReplyDelete
  10. ana anish. kavithai nalla iruku but athakuriya padam ippadi pottu thappu pannathinga sola theriyala but photo not match this..

    ReplyDelete
  11. @எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்: வாங்க நண்பரே !

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete
  12. @kilora: ஓகேய்...! இனிமே சரியான படத்தை போடுறேன்...!

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! :)

    ReplyDelete