23 Oct 2012

அழகிகள் கவனத்திற்கு...


அழகை கண்டாலே
அலைபாயும் வயதெனக்கு...!

ஓரப்பார்வையும்
ஒரு சின்ன புன்னகையுமே
என்னை சாய்த்துவிடலாம்...!

கோபத்தை கொட்டி சென்றாலும்,
திட்டி தீர்த்தாலும்
திருந்த மனமில்லை எனக்கு...!

படிப்பதை வெறுக்கிறேன்...!
ஆனாலும் எனக்கோ
கல்லூரிக்கு வருவது மட்டும்
பிடித்திருக்கிறது....!

நாளை சேர்ந்தே ஊர் சுற்ற
இன்று பின்னால் சுற்றவும்
தயக்கமில்லை...!

முறைத்து பார்த்தாலும்
உறைக்க போவதில்லை எனக்கு...!

கண்களில் பொய்யாய் ஒரு
காதலை பூசிக்கொண்டும்,
வார்த்தைகளில் அழகாய்
இனிமையை தடவிக்கொண்டு,
வந்துகொண்டிருக்கிறேன் நான்...!

இதயத்தை பத்திரப்படுத்திகொள்ளுங்கள்...!
இது அழகிகள் கவனத்திற்கு...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

9 comments:

  1. அருமை அருமை
    நிச்சயம் அழகிகள் ஜாக்கிரதையாகத்தான்
    இருக்கவேண்டும்.இல்லையேல் இத்தனை
    அருமையான கற்பனை வளம் மிக்கவரிடம்
    கொள்ளை போக அதிக சாத்த்தியமிருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அழகிகளே... ஜாக்கிரதை...!

    ரசித்தேன்... பாராட்டுக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  3. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நாளை சேர்ந்தே ஊர் சுற்ற // மிக அழகான வரிகள் தல .. இயல்பாய் பொருந்தி போகிறது ...

    ReplyDelete
  5. கண்களில் பொய்யாய் ஒரு காதலை // எத்தனை தல .. எத்தனை காதல் தல ..


    //கல்லூரி அழகிகள் கவனத்திற்கு , பொய்யான காதலாம் அப்புறம் உங்க விருப்பம் ..//

    ReplyDelete
  6. Iyalbana kavidhai...!!! Iruppinum "Azhagigalai" mattume echarikkum vidhathil irundhu therigiradhu kavingarin siru thimir...:p:p

    ReplyDelete
  7. itha kavithai elutha oru thil venum.... na ippadi than nu solla ethana peruku thairiyam iruku.... i can see my self in this poem... head's off

    ReplyDelete