13 Nov 2012

தீபாவளி கவிதை !


தீபாவளி வெளிச்சத்தில்
தேவதையா
ய்
ஜொலிக்கிறாய் நீ...!
வீட்டிற்கு வெளியே மட்டும்
வந்துவிடாதே...!!
மரித்து போன நரகாசுரன் - நீ
சிரித்து பேசுவதை காண
மறுபடியும் பிறந்து வரலாம்...!!!


***********************************************************************************


என் வீட்டில் செய்த
எந்த தீபாவளி இனிப்புக்கும்
சுவையில்லை...!
அன்றொருநாள்
நான் உண்ட
உன் உதடுகளை போல...

***********************************************************************************


பார்வைகளால்
பற்றவைக்கிறாய் நீ...!
பட்டாசாய் - என்
உயிருக்குள் வெடிக்கிறது...!
காதல்...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

4 comments:

  1. தீபாவளி கவிதைகள் தித்திப்பு! அருமை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தீபாவளி கவிதைகள் அருமை....

    ReplyDelete
  3. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    மங்களம் நிறைய,
    மகிழ்வொடு வாழ்த்துவம்!

    ReplyDelete
  4. சிறப்புக் கவிதை வெகு வெகு சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete