15 Nov 2012

காதல் கவிதைகள் !


கல்லூரியின்
விடுமுறை நாட்களிலெல்லாம்
என் மனதோடு
தவறாமல் பிறந்துவிடுகிறது....!
என் வீட்டின் எதிர் வீட்டில்
அவள் பிறந்திருக்கலாமென்ற
என் ஆசை....

***********************************************************************************


என் செல்போனின் மேல்
எனக்கு கோபம்...!
உன் முத்தங்களின்
ஈரங்களை திருடிவிட்டு,
அதன் சத்தங்களை மட்டும்
என் காதோரம் வருடி செல்கிறது...!

***********************************************************************************


விடாமல் பெய்கிறது மழை...!
குடையில்லாமல் நீ
வெளியே வந்துவிடாதே....!!
மழைக்கு
காய்ச்சல் வந்துவிடப்போகிறது...!!!

***********************************************************************************


புண்ணியம் செய்தவைகள் - உன்
புத்தகங்கள்...!
மிக அருகிலே - உன்
முக தரிசனங்கள்...

***********************************************************************************


உன் பார்வைகளால்
எனக்குள் வேகமாய் பரவுகிறது...!
காதல் நோய்...
பெண்ணே !
நீயே ஒருமுறை என்னை
பரிசோதித்துவிடு....!
உன் பார்வை நேரத்தில்...

----அனீஷ் ஜெ....



SHARE THIS

5 comments:

  1. எது மிகவும் நல்லா இருக்கு என்று சொல்லத் தெரியவில்லை.... அனைத்தும் அருமை... (படங்களும்)

    ReplyDelete
  2. Kaadhaliyin edhir veettil kudiyera vaazhthukkal...!!! Anaithu kavidhaigalum azhagu...!!!- Rizwana.

    ReplyDelete
  3. உங்கல் தமில் காதல் கவிதைகள் நல்லா இருக்க்கு

    ReplyDelete
  4. romba jasti ella?:))))))

    ReplyDelete