11 May 2013

விரல்களும்... விரல்களும்...


குடையின்
கைப்பிடியில்
சத்தமில்லாமல்
உரசிக்கொள்கிறது...!
நம் கைவிரல்கள்...

என் விரல்களோ
உன் விரல்கள் மேல்
இரகசியமாய்
இடப்பெயர்ச்சி செய்கிறது...!

கடும் குளிரிலும் - உன்
கை விரல்கள் மேல்
மின்னலின் வெப்பம்...!

நெளியும் - உன்
விரல்களில் கூட
வழிந்தோடுகிறது
வெட்கங்கள்...

இறுக்கி பிடித்ததும்
அடங்கிப்போன
உன் விரலசைவில்
கிறங்கிப்போகிறது மனது...!

எனக்கே தெரியாமல்
உனக்குள் மூழ்குகிறேன் நான்...!

இந்த மழை மட்டும்
நிற்காமல்
நீடிக்க வேண்டும்...!
உன் காதலில் - நான் 

மூழ்கி முடியும் வரை...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

11 comments:

  1. ரசித்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான கவிதை ..! பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. எப்பொழும் போல கவிதை அருமை

    ReplyDelete
  4. இக்கோடையில்
    கவிதை வழியாக-காதல்
    மழையினைப்
    பொழிந்தமைக்கு-மிக்க
    நன்றி...

    மழைக்கால
    காதல் மழை-தொடர
    வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  5. superb fantastic lines anish.....:)

    ReplyDelete
  6. nice thought

    ReplyDelete