14 Oct 2013

சேர்ந்திருந்தால் சுகமே...


நிசப்தங்களாலான - என்
நித்திரையை - உன்
கனவுகளால்
கலகலப்பாக்கினாய்...!

வெறுமையான - என்
வானத்தில்
வானவில்லின்
வன்ணம் சேர்த்தாய்...!

சருகுகள்
சலசலத்த - என்
சாலை பாதையில்
சட்டெனெ வந்து பூவிரித்தாய்...!

பேசத்தெரியாத - என்
பேனாவை
கவிதைகள் சொல்லி
கத்த வைத்தாய்...!

உன்னோடு சேர்ந்திருந்தால்
வலிகள் கூட வரமாகும்...!
சோகம் கூட சுகமாகும்...!!

----அனீஷ் ஜெ...





SHARE THIS

2 comments: