30 Jun 2014

மழைக்காலம் !

anishj kavithai

கடும் வெயிலில் - உன்
கழுத்தோரம்
விழுந்தோடும்
வியர்வை துளிகளாய்,
உனக்குள் உருண்டோடி - உன்
உயிரை தொட்டு
உலர்ந்து போகிறது என் நினைவுகள்...!

துடைத்தெறியப்பட்ட
துளி திரவத்தின் ஈரமாய்,
இன்னும் இருக்குறேன் நானுன்
இதயத்தின் ஓரம்...!

வெயில் விட்டு
மழை கொட்டும் காலங்களில்
மறைந்து போகும்
வியர்வை துளிகளாய் - என்
நினைவுகளை
நீ மறந்துபோய்விடாதே...

மழை காலங்களுக்காய்,
வெயிலை கொஞ்சம்
பத்திரப்படுத்திக்கொள்...!
என் நினைவுகளுக்காய்
என் காதலையும்...

---- அனீஷ் ஜெ...
SHARE THIS

0 விமர்சனங்கள்: