31 Aug 2015

மரணப்புழுக்கள் !


மரணப்புழுக்கள்
மனமெங்கும் நெளிகிறது !

வீசியெறிந்த வார்த்தைகள் - மனதை
விறகாக்கி உடைக்கிறது !

கரும்சோகங்கள்
கழுத்துக்குள் அடைக்குறது !

வலிகளெல்லாம் - இதயத்தின்
வாசற்படியிலே காத்திருக்கிறது !

பகலுக்கும் இரவுக்கும்
இரவுக்கும் பகலுக்குமான
இடைவெளிகள் மட்டுமே நீள்கிறது !

வாழ்ந்து முடிக்கையில்
வலிகளை மட்டுமே 

மிச்சம் வைத்து செல்கிறது வாழ்க்கை...!
வலிகளை மட்டுமே...

----அனீஷ் ஜெ...





SHARE THIS

1 comment: