8 Dec 2015

சிறு மழை - பெரும் வெள்ளம்


சிறு துளியாய்
வெறும் தரையில் விழுந்தது...!
முதல் மழைத்துளி...

சிறுதுளிகளெல்லாம்
சங்கீதாமாய் பொழிய
தூறல் மழை சாரலானது...!

அடைமழை அழகாய் விழ
குடை பிடிக்கவும் பிடிக்கவில்லை...!

நிலவின் குளிரும்
நீல வானின் அழகும் போல - என்
மேலே விழுந்தது மழை...!

சுகமாய் நனந்தேன் நான்...!

மேக கூட்டங்கள் - அதன்
தேகம் கரையும் வரை
கொட்டித்தீர்த்தது மழை...!

பாதத்தை தொட்டிருந்த மழையோ
என்னி
ல்  பாதியை
எட்டியிருந்தது இப்போது...!

கால்கள் இரண்டும்
கடும் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள
நீந்து முயற்சிகளில்
மீண்டும் மீண்டும் தோற்கிறேன் நான்...!

மழையோ நின்றபாடில்லை...!

முகம் நோக்கி
முன்னேறும் வெள்ளம் - என்னை
மூழ்கடிக்கும் முன்
மூச்சை இழக்காமல் தப்பிக்கவேண்டும்...!

முயற்சிகள் ஏனோ பலனளிக்கவில்லை...!

கடைசியில்
தோற்றே போகிறேன்...!
மூழ்கியே மூச்சை இழ்ந்துவிட்டேன் நான்...!

சில மழைகளுக்கு
மனசாட்
சியே இருப்பதில்லை...!
சுகமாய் விழ ஆரம்பித்து - பின்பு
சுக்குநூறாக்கி,
கடைசியில்
கண்மூடித்தனாய் கொன்றே விடுகிறது...!
சில காதல்களை போல...

----அனீஷ் ஜெ...




SHARE THIS

0 விமர்சனங்கள்: