28 Mar 2016

நிலா பேசியது !


அமைதியில்லாத இரவுகளில்
அருகில் துணையாக நிலா...!

நடுஇரவு தாண்டினாலும்
நாங்கள் இருவரும்
சலிக்காமல் பேசிக்கொள்கிறோம்...!

பகலில் பார்த்த சூரியன்,
பக்கத்தில் பார்த்த நட்சத்திரம்,
பவுர்ணமியின் ரகசியம் என
எதையும் விட்டுவைக்காமல்
என்னிடம் கூறியது நிலா...!

எதுவும் பேசாமல்
கேட்டுக்கொண்டிருந்த என்னிடம்,
எதாவது பேசச்சொல்லி
கேட்டுக்கொண்டது நிலா...!

நானோ அவளைப்பற்றி பேசினேன்...!

நீண்ட நேரம் பேசியபின்
மீண்டும் சந்திக்கலாமென சொல்லி
விடைபெற்றுக்கொண்டோம் நாங்கள்...!

காலையில் கண்விழித்ததும்
கண்ணெதிரே நின்ற அம்மா கேட்டாள்...!
உறக்கத்தில் ஏன் உளறுகிறாய் என்று...

----அனீஷ் ஜெ...


SHARE THIS

2 comments:

  1. மிக மிக அருமை
    மிகக் குறிப்பாக முடித்த விதம்..
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக மிக அருமை

    ReplyDelete