24 Jun 2016

நிலவும் நீயும்...


அமாவாசை நிலவை
அண்ணாந்து பார்த்தாய் நீ...!
வானமெங்கும் பவுர்ணமி பரவியது...!!

நிலா ஒருநாள் கண்ணாடி பார்த்தது...!
உன் முகம் தெரிந்தது...!!

நிலவுக்கும் செவ்வாய்க்கும்
நாற்பதுகோடி கிலோமீட்டராம்...!
உனைபார்க்கும்போது மட்டும்தான்
நிலவினுள் செவ்”வாய்” தெரிகிறது...!

அன்றொரு நாள்
ஆம்ஸ்ட்ராங் நிலவின்மேல்
கால் பதித்தான்...!
ஆனால் நானோ
அதைவிட அழகான நிலவில்
அடிக்கடி இதழ் பதிக்கிறேன்...!!

இன்றிரவு என்னருகில்
இரு நிலவுகள் வேண்டாம்...!
வான் நிலவே...
வந்த வழியே திரும்பிப்போ...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

4 comments:

  1. மோகன்ராஜ்August 02, 2016 10:32 am

    அற்புதத்தின் உச்சகட்ட கவிதை

    ReplyDelete
  2. Very excellent Heart of Thank to you

    ReplyDelete
  3. Very very beautiful ungalai parthu nanum kavijsanaga asai Patten...

    ReplyDelete