15 Jun 2016

தனிமையில் நான் !


தனிமையில் நிற்கிறேன் நான்...!

கடந்து செல்வோர் பலர்
காரணம் கேட்டு நகர்கின்றனர்...!

துரோகமெனும் வெயிலும்
ஏமாற்ற மழையும் - என்
உயிர் எரித்து நனைக்கிறது...!

கதறி அழ நினைத்தாலும்
கண்ணீர் துளிகளை
இமைகளுக்கிடையில்
இறுக்கி பதுக்கிக்கொள்கிறேன்...!

காலங்கள் கடந்து சென்றாலும் - என்
கால்கள் கடக்க வழி தெரியவில்லை...!

மனம் கனக்கும் - உன்
நினைவு பொதியுடன்
தனிமையிலே நிற்கிறேன் நான்...!
நீ விட்டுச்சென்ற
அதே இடத்தில்...

----அனீஷ் ஜெ...
SHARE THIS

9 comments:

  1. முகில்June 15, 2016 8:23 pm

    வலி

    ReplyDelete
  2. கவிதாசன்July 25, 2016 3:23 pm

    அனுபவித்தவனுக்குத் தான் தெரியும்..வலியின் அவஸ்தை..

    ReplyDelete
  3. வெளிவராத வலியும்வந்துதித்தது விரலில்எவ்வளவு இறுக்கத்தைதான்தாங்கும் இதயம்

    ReplyDelete
  4. நானும் தனிமையில்தான் நண்பா

    ReplyDelete
  5. Rompa kashta patura bro

    ReplyDelete
  6. I love this kavithai

    ReplyDelete
  7. தனிமையில் இருக்கிறது கண்கலில் கண்ணீர் வரவில்லை.

    ReplyDelete