10 Aug 2016

அவனுக்கு இதயமில்லை !


அவனை அன்புசெய்தார்கள் சிலர்....!
அவனோ அதை திருப்பிகொடுக்கவில்லை...!

நண்பனைகூட நம்புவதில்லை அவன்...!
நகைத்தார்கள்...!

அறிவுரைகளையும் அவன்
அலட்சியமே செய்கிறான்...!

கண்ணீரும்
கதறி அழுவதும் கூட
அசைத்துப்பார்க்காது அவனை...!

முகத்துக்கு நேராய் புகழ்பவர்களையும்
முறைத்த கண்களுடனே கடக்கிறான்...!

அவனுக்கு இதயமே இல்லையென
அனைவரும் பேசிக்கொண்டார்கள்...!

ஆனால் அவனுக்கோ
அப்படியிருப்பதே பிடித்திருந்தது...!

ஏனென்றால்
உடைந்த இதயங்களைவிட
இதயமில்லாததே சிறந்தது...!

----அனீஷ் ஜெ...
SHARE THIS

5 comments: