5 Oct 2016

இரவின் பாதைகள் !


இரவு மெல்ல
இமை திறக்கிறது...!

பாய் விரித்த
பாலைவன தேசத்தில்
பயணமொன்று செல்கிறோம் நாம்...!

மார்பு பள்ளத்தாக்கில் - நான்
தடுக்கி விழும்போதெல்லாம்
இடையொன்றை
இறுக்கிபிடித்தே நகருகின்றேன்...!

உதடுகளை உரசி
அக்கினி வெளிச்சத்தை
உருவாக்கும் முயற்சியில்
தோற்றுப்போகிறோம் நாம்...!

பெருமூச்சில்
பெரும்சூடு வீச,
குருதிக்குள்
குளிர்காற்று பாய்கிறது...!

மேடு பள்ளங்கள்,
சுவாச வெப்பங்கள்,
முனகல் சத்தங்களாய்
இந்த இருளை போல - நமக்கு
இரவின் பாதைகளும் நீள்கிறது...!

----அனீஷ் ஜெ...
SHARE THIS

3 comments: