31 Dec 2017

உணவு !


சிறு குழந்தைபோல‌
சிறிதும் விருப்பமின்றி
அலறி கதறி அழுது
அடம்பிடிக்கிறேன் நான்...!

கருணையேதும் இல்லாமல்
கனவெனும் இலையில் பரிமாறி - என்
உயிர்வாய் திறந்து
உள்ளே திணித்துக்கொண்டிருக்கிறது...!

உதறிச்செல்லவோ,
உமிழ்ந்துதள்ளவோ வழியேதுமில்லை...!
இமைகளை இறுக்கி அடைத்தே
உயிருக்குள் விழுங்குகிறேன்...!!
இரவுக‌ள் எனக்கூட்டும்
உன் நினைவுகளை...

‍‍‍‍---- அனீஷ் ஜெ...
SHARE THIS

0 விமர்சனங்கள்: