5 Aug 2016

முகம் தழுவி...


வண்ணத்து பூச்சியின் நிறத்தை
வாரியெடுத்து சேர்த்திருக்கலாம்...!

தென்றலின் வேகத்தை
தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்...!

பஞ்சின் மென்மையெல்லாம்
பத்திரமாய் புதைத்திருக்கலாம்...!

பூந்தோட்டத்தின் வாசத்தை
பூட்டியே வைத்திருக்கலாம்...!

உரசியே சென்றாலும்
உன்மேல் காதல் கூட்டிச்செல்கிறது...!
என் முகம் தழுவிச்செல்லும்
உன் முந்தானை...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

3 comments:

  1. எனக்கும் "கலாம் "
    எனத் தான் படுகிறது
    துவங்கியதும், தொடர்ந்ததும்
    முடித்த விதமும் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete