![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM2GypdZ37ler4JjdMkDXDqT1HdQ2HNlPJRTS8X04Pj8jmdNuMJl71brYFGu8v4BN-XdT4X6XFSoGzz4lDPDBZbOf87rnDqM0pIuGqcW1Ev5Onck7Fcoop2FtKPWMTYauBzNJ_0L8Cz7LB/s320/111.jpg)
உதடுகள் நான்கும் சேர,
உருவாகும் ஈர முத்தம்...!
விரல்கள் மொத்தமாய்,
விளையாடும் மவுன சத்தம்...!
தேகங்கள் கட்டிக்கொண்டு,
தொடர்கின்ற கட்டில் யுத்தம்...!
எல்லா காதல்களின்
இதய கதவுகளுக்கு பின்னாலும்,
மறைந்திருந்துகொண்டு
கண் சிமிட்டி எட்டிப் பார்க்கிறது
காமம்...!
காரணம்...
காமம் இல்லாமல்
காதல் இல்லை...!
காமம் இல்லையென்றால் - அது
காதலே இல்லை...!!
----அனீஷ் ஜெ...