விஷங்களை சுமந்த
புன்னைகையோடு
எதிர்படும்
மனித முகங்கள்...!
சுயநலங்களோடு
சுயம்வரம் நடத்திவிட்டு,
காதலிப்பவரையே
கல்லறைக்கு அனுப்பும்
காதல் கொலையாளிகள்...!
பிணம் தின்னும்
கழுகுகளைவிட,
கொடூர முகங்களொடு
சில பணம் தின்னும்
மனிதர்கள்...!
கரன்சி நோட்டுக்கு
கைகால் முளைத்திருந்தால்
கட்டிலில் கூட அதையே
கட்டியணைத்திருப்பார்கள் இவர்கள்..!!
தூக்கிப்போடுவதும்,
துரோகம் செய்வதும்,
ஏளனம் செய்வதும்,
ஏமாற்றி கொல்வதும்,
சாதாரணமாய் செய்யும்
அசாதாரண பிறவிகள்...!
நரகம் கூட
நாளை இவர்களை கண்டு
கதவடைக்கலாம்...!!
ஆச்சரியமில்லை...!!!
காயம்பட்ட இதயத்திற்குள்ளும்
கத்தியால்
கல்லறை நெய்கிறார்கள்...!
என்
கண்ணிர்துளிகளை
கங்கை நதியாக்கி - அதில்
மூழ்கி எழுந்து
முகம் சிரிக்கிறார்கள்...!
பொய்கள் கோர்த்த
வார்த்தை வலையில்
மாட்டிக்கொண்டே மரணிக்கிறது...!
மனது...
சோகங்களை சுமந்தே
சோர்ந்து போய் கிடக்கிறது...!
எனது உயிர்...
கருவறைக்கும்
கல்லறைக்குமான
எனது தூரம்
சின்னதாய்
சுருங்கிப்போகிறது...!
கடைசி வாக்குமூலங்கள்
கவிதைகளாய்
கையொப்பமிடுகின்றன...!
கண்ணுக்கெட்டாத தூரத்தில்,
யாரும் இல்லாத தனிமையில்
நான் மறைந்து போக வேண்டும்...!
உடைந்த கனவுகளும்,
அதிக வெறுமைகளும்,
நிறைய ஏமாற்றங்களும்தான்
கடைசியாய் என்னிடம்
மிச்சமிருக்கின்றன...!
எல்லாவற்றையும்
அள்ளிக் கட்டிக்கொண்டு
இப்போதே நான்
பயணமாக வேண்டும்...!
ஏனெனில்
எல்லாம் நிறைவேறிற்று...
----அனீஷ் ஜெ...
புன்னைகையோடு
எதிர்படும்
மனித முகங்கள்...!
சுயநலங்களோடு
சுயம்வரம் நடத்திவிட்டு,
காதலிப்பவரையே
கல்லறைக்கு அனுப்பும்
காதல் கொலையாளிகள்...!
பிணம் தின்னும்
கழுகுகளைவிட,
கொடூர முகங்களொடு
சில பணம் தின்னும்
மனிதர்கள்...!
கரன்சி நோட்டுக்கு
கைகால் முளைத்திருந்தால்
கட்டிலில் கூட அதையே
கட்டியணைத்திருப்பார்கள் இவர்கள்..!!
தூக்கிப்போடுவதும்,
துரோகம் செய்வதும்,
ஏளனம் செய்வதும்,
ஏமாற்றி கொல்வதும்,
சாதாரணமாய் செய்யும்
அசாதாரண பிறவிகள்...!
நரகம் கூட
நாளை இவர்களை கண்டு
கதவடைக்கலாம்...!!
ஆச்சரியமில்லை...!!!
காயம்பட்ட இதயத்திற்குள்ளும்
கத்தியால்
கல்லறை நெய்கிறார்கள்...!
என்
கண்ணிர்துளிகளை
கங்கை நதியாக்கி - அதில்
மூழ்கி எழுந்து
முகம் சிரிக்கிறார்கள்...!
பொய்கள் கோர்த்த
வார்த்தை வலையில்
மாட்டிக்கொண்டே மரணிக்கிறது...!
மனது...
சோகங்களை சுமந்தே
சோர்ந்து போய் கிடக்கிறது...!
எனது உயிர்...
கருவறைக்கும்
கல்லறைக்குமான
எனது தூரம்
சின்னதாய்
சுருங்கிப்போகிறது...!
கடைசி வாக்குமூலங்கள்
கவிதைகளாய்
கையொப்பமிடுகின்றன...!
கண்ணுக்கெட்டாத தூரத்தில்,
யாரும் இல்லாத தனிமையில்
நான் மறைந்து போக வேண்டும்...!
உடைந்த கனவுகளும்,
அதிக வெறுமைகளும்,
நிறைய ஏமாற்றங்களும்தான்
கடைசியாய் என்னிடம்
மிச்சமிருக்கின்றன...!
எல்லாவற்றையும்
அள்ளிக் கட்டிக்கொண்டு
இப்போதே நான்
பயணமாக வேண்டும்...!
ஏனெனில்
எல்லாம் நிறைவேறிற்று...
----அனீஷ் ஜெ...