31 Dec 2012

விடைபெறுகிறேன் நான்....

விடைபெறுகிறேன் நான்....


கைகுலுக்கி
உங்களோடு கலந்துவிட்டு - நான்
உங்கள் கண்களை
கலங்க வைத்திருக்கலாம்...!

எதிர்பாராமல்
எப்பொழுதாவது உங்களை
மகிழ்ச்சியின் மழையில்
நனையவும் வைத்திருக்கலாம்...!

வெற்றிகளையும்,
பலநேரங்களில்
தோல்விகளையும்
உங்களுக்கு நான்
பரிசளித்திருக்கலாம்...!

சிலருக்கு
வலிகளை மட்டுமே
வாரி வழங்கியிருக்கலாம்...!
இன்னும் சிலருக்கோ
இனிமையான தருணங்களை
இதயத்தில் பதித்திருக்கலாம்...!!

உங்களிடமிருந்து சிலவற்றை
பறித்திருக்கலாம்....!
உங்களை சிலசமயம்
பயமுறுத்தியிருக்கலாம்...!!

நான் தந்த வலிகளுக்காய்
என்னை மன்னித்துவிடுங்கள்...!
நான் தந்த மகிழ்சிகளுக்காய்
என்னை மனதில் நினைவுகளாக்குங்கள்...!!

இன்னொருமுறை - நாம்
சந்தித்துக்கொள்ள
இனி வாய்ப்பே இல்லை...!

விடைபெறுகிறேன் நான்....

இப்படிக்கு
இரண்டாயிரத்து பனிரெண்டு...

----அனீஷ் ஜெ...


12 Dec 2012

புதுக்கவிதை !

புதுக்கவிதை !


உன் வீட்டு
பூந்தோட்டத்தில்
உதிர்ந்து கிடந்த
பூவை எடுத்து,
உன் தலையில்
சூடிக்கொண்டாய் நீ...!
உன் கூந்தலில்
சிக்கிக்கொண்ட பூவோ
உயிர்த்தெழுந்தது...!

***********************************************************************************


உன்னை மறக்கச்சொல்லி
என்னை மறந்து சென்றாய் நீ...!
நான் மறந்த பின்பும்,
நீ மறந்து போனதை
மறக்காமல் எனக்கு
ஞாபகப்படுத்துகின்றன...!
உன் ஞாபகங்கள்...

----அனீஷ் ஜெ...


 

4 Dec 2012

காதல் கதைகள் !

காதல் கதைகள் !


பேருந்து இருக்கைகளின்
பின்புறத்தில்
கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும்
இதய வரைபடத்தின்
இடையில் திண்டாடும்
இரண்டு பெயர்கள்...!

கல்லூரி நாட்களில்
காலை முதல்
மாலை வரை - தன்
காதலியை பற்றி
உளறியே - என்
உயிரெடுக்கும் நண்பன்...!

காதலுக்காக
உயிர்விடவும் துணியும்
சினிமாவின்
கதாநாயக கதாபாத்திரங்கள்...!

பெற்றோரை துறந்துவிட்டு,
எல்லாவற்றையும் மறந்துவிட்டு,
எவருக்கும் தெரியாமல்
மாலை மாற்றிக்கொள்ளும்
ரகசிய காதல் திருமணங்கள்...!

இந்த நிகழ்வுகள் அத்தனையும்
முட்டாள்களின் கதைகளாகவே
தெரிந்தன எனக்கு...!
அவளை நான்
சந்திக்கும் வரையில்...

----அனீஷ் ஜெ...


21 Nov 2012

நான்காம் உலகப்போர் !

நான்காம் உலகப்போர் !


வெட்கங்கள் - உன்
பூந்தேகத்தில்
புடவை நெய்யும் நேரமிது...!

முத்தங்கள் - உன்
உடல் பிரதேசத்தில்
ஈரம் விதைக்கும் காலமிது...!

உன் தேகவீணையில்
என் விரல்கள் இசைக்கையில்
ஆசை தூண்டுது
அதன் ஓசைகள்...!

உன் மார்புபோர்வையை
நான் இழுத்து போர்த்தையில்
எல்லை தாண்டுது
என் ஆசைகள்...!

தீண்டல்களில்
தீ பற்ற,
உன் இடையோரம்
நான் முட்ட,
உன் தேக சூட்டினில்
பட்டு தெறிக்குது
என் மோகங்கள்...

கட்டில் முழுவதும்
கலவர பூமியாக,
உனக்கும் எனக்குமாய் - மூன்றாம்
உலகப்போர் வெடித்தது...!

மோகங்களை நான் கொஞ்சம்
மிச்சம் வைக்கிறேன்...!
நாளைய நமது
நான்காம் உலகப்போருக்காக...

----அனீஷ் ஜெ...

18 Nov 2012

தலைப்பு செய்திகள் !

தலைப்பு செய்திகள் !


காதல் என்றேன்...!
கண்டுகொள்ளவில்லை நீ...!!

பின்னால் நடந்தேன்..!
உன்னுள் காதல் கனியவில்லை...!!

இன்று ஏன் புதிதாய்
என் முகம் பார்த்து
புன்னகை பூக்கிறாய்...?

உயிருக்குள்
உன் புன்னகை பூக்கள்
உதிர்ந்து விழுகிறது...!

இன்னொருமுறை - என்
இதயத்தில்
உன் பார்வைகளால்
ஊசிமுனை ஏற்று...!

தலைகால் புரியாமல்
என் இதயம்
ஆயுள் முழுவதும்
தலைப்பு செய்தி
வாசிக்கட்டும்...!
உன் பெயரை...

----அனீஷ் ஜெ...

15 Nov 2012

காதல் கவிதைகள் !

காதல் கவிதைகள் !


கல்லூரியின்
விடுமுறை நாட்களிலெல்லாம்
என் மனதோடு
தவறாமல் பிறந்துவிடுகிறது....!
என் வீட்டின் எதிர் வீட்டில்
அவள் பிறந்திருக்கலாமென்ற
என் ஆசை....

***********************************************************************************


என் செல்போனின் மேல்
எனக்கு கோபம்...!
உன் முத்தங்களின்
ஈரங்களை திருடிவிட்டு,
அதன் சத்தங்களை மட்டும்
என் காதோரம் வருடி செல்கிறது...!

***********************************************************************************


விடாமல் பெய்கிறது மழை...!
குடையில்லாமல் நீ
வெளியே வந்துவிடாதே....!!
மழைக்கு
காய்ச்சல் வந்துவிடப்போகிறது...!!!

***********************************************************************************


புண்ணியம் செய்தவைகள் - உன்
புத்தகங்கள்...!
மிக அருகிலே - உன்
முக தரிசனங்கள்...

***********************************************************************************


உன் பார்வைகளால்
எனக்குள் வேகமாய் பரவுகிறது...!
காதல் நோய்...
பெண்ணே !
நீயே ஒருமுறை என்னை
பரிசோதித்துவிடு....!
உன் பார்வை நேரத்தில்...

----அனீஷ் ஜெ....



13 Nov 2012

தீபாவளி கவிதை !

தீபாவளி கவிதை !


தீபாவளி வெளிச்சத்தில்
தேவதையா
ய்
ஜொலிக்கிறாய் நீ...!
வீட்டிற்கு வெளியே மட்டும்
வந்துவிடாதே...!!
மரித்து போன நரகாசுரன் - நீ
சிரித்து பேசுவதை காண
மறுபடியும் பிறந்து வரலாம்...!!!


***********************************************************************************


என் வீட்டில் செய்த
எந்த தீபாவளி இனிப்புக்கும்
சுவையில்லை...!
அன்றொருநாள்
நான் உண்ட
உன் உதடுகளை போல...

***********************************************************************************


பார்வைகளால்
பற்றவைக்கிறாய் நீ...!
பட்டாசாய் - என்
உயிருக்குள் வெடிக்கிறது...!
காதல்...

----அனீஷ் ஜெ...

9 Nov 2012

பார்வைகள் போதும்...

பார்வைகள் போதும்...


மரக்கிளையிலிருந்து
மரணித்து விழுந்த
உலர்ந்த சருகாய்,
உன் சாலையில்
சிதறிக்கிடக்கிறேன் நான்...!

உன் பாதங்களால்
வதைக்காமல்,
உன் பார்வைகளை
விதைத்து செல்...!
உலர்ந்த என் உயிருக்குள்
உன்னால் பூக்கள் முளைக்கட்டும்...!

----அனீஷ் ஜெ...



6 Nov 2012

4 Nov 2012

வேண்டுதல்களோடு காத்திருப்பேன் !

வேண்டுதல்களோடு காத்திருப்பேன் !


என் மூச்சுப்பையின்
சுவாசத்தை - என்
கருப்பைக்கு
இடமாற்றினேன்...!
மிச்சத்தில் தான் - என்
இதயம் துடித்தது....!

என் கருப்பையோ
உன்னை சுமக்க,
என் மனதோ
உன்னை காணும்
ஆசைகளையும்,
உனக்கான - என்
அன்பையும் சுமந்தது...!

முதன் முதலில்
உன்னை என் கைகளில்
ஏந்திய மகிழ்ச்சியை
எப்பொழுது உன்னை பார்த்தாலும்
என் உயிருக்குள் உணர்கிறேன்...!

மூன்று மாதங்கள்...!
மூன்று வயது...!!
முப்பது வயது....!!!
உன் எந்த வயதிலும்
உன்னை தொடும்
சிறு காய்ச்ச்ல் கூட - என்னை
கண்கலங்க வைத்துவிடுகிறது...!

வலிக்காமல் அடிக்க எனக்கும்,
வலிக்காமலே அழ உனக்கும்
நன்கு தெரியும் என்பது
நம் இருவருக்குமே தெரியும்...!

நொடிகள் ஒவ்வொன்றிலும் - நான்
உன் நலமே விரும்புகிறேன்...!
இந்த தள்ளாத வயதிலும்...

முதியோர் இல்லத்திலிருக்கும் என்னை
மூன்று மாதத்திற்கு பிறகு
இன்று தான் பார்க்க வந்திருக்கிறாய்...!

தள்ளாடி நடந்தே
வாசல் வரை வந்து - உன்னை
வழியனுப்புகிறேன்...!

மகனே...
பத்திரமாய் சென்று வா...!

காத்திருப்பேன் நான்....!!

அடுத்த ஜென்மத்திலும்
நீதான் எனக்கு மகனாக
பிறக்க வேண்டுமென்ற
வேண்டுதல்களோடு...

----அனீஷ் ஜெ...

2 Nov 2012

இரண்டு நிலாக்கள் !

இரண்டு நிலாக்கள் !


இரண்டு நிலாக்கள்
இரவில் எனக்கு தேவையில்லை...!
வானத்து நிலவே....
வந்த வழியே - நீ
திரும்பிப் போய்விடு...!!
என்னவள்
என்னருகில் இருக்கிறாள்...

----அனீஷ் ஜெ...


29 Oct 2012

விளையும் பயிர் !

விளையும் பயிர் !


உன் ஓரப்பார்வையில்தான்
ஆரம்பித்தது....!
உனக்கான என் காதல்...

என் இமைகள் வழியே
உள்ளிறங்கி
என் இதயம் வரை
உள் நுழைந்தாய் நீ...!

உனக்காகவே எதையும் செய்யவும்
அதற்காகவே எதையும் எதிர்க்கவும்
கற்றுக்கொடுத்திருக்கிறது காதல்...!

உன்னுடன் வாழலாம் என
உருவாகிய என் காதல்
உனக்காகவே சாகவும் - என்னை
உருமாற்றியிருக்கிறது...!

மனதில் விதைத்த
காதல் பயிர்
முளைக்குமென்று தெரியும்...!
ஆனால்
காதலென்னும் இந்த பயிர்
விளையுமா என்று
முளையிலே கூட தெரிவதில்லை...!

----அனீஷ் ஜெ...

26 Oct 2012

உன்னை படித்த என் கவிதைகள் !

உன்னை படித்த என் கவிதைகள் !

 

இமை திறந்து இழுத்தாய்...!
எனை மறந்து விழுந்தேன்...!!
விசையா இது தெரியவில்லை...!
விளைவும் எனக்கு புரியவில்லை...!!
விதி எதுவென்று கண்டு சொல்ல
நியூட்டனும் இங்கில்லை...!!!

ஈரிதழ் விரித்து சிரித்தாய்...!
ஈர அமிலமாய் உயிரை எரித்தாய்...!!
உனக்குள் நான் கரைகின்றேன்...!
உன் முன்னாலே உறைகின்றேன்...!!
திடப்பொருள் நான்
திரவமாய் திரிகின்றேன்...!!!

இரவிலும் கனவாய் தெரிந்தாய்...!
இருட்டிலும் நிறமாய் நெளிந்தாய்...!!
நிலவென்கிறேன்...!
நீல வானென்கிறேன் உன்னை...!!
உன்னை சுற்றும்
ஒற்றை கோள் நானாகிறேன்...!!!

என் காதோரம் சிணுங்கினாய்...!
உன் உதட்டோரம் முணுங்கினாய்...!!
உன்னை நான் அணைத்தேன்...!
உடல் தொட்டு எரிந்தேன்...!!
அணைத்தாலும் அணையாத
உன் சூட்டில் புதைந்தேன்...!!!

உன்னை தினமும் படித்தேன்...!
உனக்காய் கவிதை வடித்தேன்...!!
காகிதத்தில் வார்த்தையாகிறாய்...!
கவிதைக்குள் சுவாசமாகிறாய்...!!
என் கற்பனையை கத்தி முனையில்
உனக்காய் கைது செய்கிறாய்...!!!

----அனீஷ் ஜெ...

23 Oct 2012

அழகிகள் கவனத்திற்கு...

அழகிகள் கவனத்திற்கு...


அழகை கண்டாலே
அலைபாயும் வயதெனக்கு...!

ஓரப்பார்வையும்
ஒரு சின்ன புன்னகையுமே
என்னை சாய்த்துவிடலாம்...!

கோபத்தை கொட்டி சென்றாலும்,
திட்டி தீர்த்தாலும்
திருந்த மனமில்லை எனக்கு...!

படிப்பதை வெறுக்கிறேன்...!
ஆனாலும் எனக்கோ
கல்லூரிக்கு வருவது மட்டும்
பிடித்திருக்கிறது....!

நாளை சேர்ந்தே ஊர் சுற்ற
இன்று பின்னால் சுற்றவும்
தயக்கமில்லை...!

முறைத்து பார்த்தாலும்
உறைக்க போவதில்லை எனக்கு...!

கண்களில் பொய்யாய் ஒரு
காதலை பூசிக்கொண்டும்,
வார்த்தைகளில் அழகாய்
இனிமையை தடவிக்கொண்டு,
வந்துகொண்டிருக்கிறேன் நான்...!

இதயத்தை பத்திரப்படுத்திகொள்ளுங்கள்...!
இது அழகிகள் கவனத்திற்கு...

----அனீஷ் ஜெ...

20 Oct 2012

கதைகள் தொடரும்...

கதைகள் தொடரும்...


பாதியிலே பறிபோய்விட்ட
பள்ளிக்கூட காதலின் சுவடுகளை
அடிமனதில் மறைத்துவிட்டு,
ஆறாண்டு இடைவெளிக்குபின்
இன்னொருவளிடம்
இதயத்தை தொலைத்த - என்
இனிய நண்பன்...!

காதலித்தவள்
கைவிட்டாள் என்பதற்காகவே
காதலின் வலிகளை
மதுவில் மறக்க பழகி
கடைசியில் ஒரு
கயிற்றில் முடித்த - தெருவின்
கடைசி வீட்டு அண்ணா...!

காதலித்தவனுடனயே
கடைசி வரை வாழ்ந்து முடிக்க
அப்பா அம்மாவை எதிர்த்து
அவசரமாய் மறைமுகமாய்
மாலை மாற்றிக்கொண்ட
எதிர்வீட்டு அக்கா...!

ஏமாற்றிய காதலியால்
எல்லா காதலும்
போலியென காரணம் சொல்லி
தினம் ஒரு பெண்ணுடன்
சென்னையை சுற்றும்
அலுவலக நண்பன்...!

பத்தாண்டு
திருமண வாழ்க்கையிலே
மொத்தமாய் வெறுத்துபோய்
நீதிமன்ற வாசலிலே
விவாகரத்துக்காய் காத்துகிடக்கும்
பக்கத்து வீட்டு காதல் ஜோடி....!

எண்பது வயதிலும்
திகட்டாத காதலை
தினம் தினம்
பகிர்ந்து வாழும்
மூன்றாம் எண் வீட்டில் வசிக்கும்
மூத்த காதலர்கள்...!

கதலித்ததாலயே
கவிதை எழுத கற்றுக்கொண்ட
நான்....!

காதலின் இந்த
கதைகளுக்கு முடிவுகளில்லை...!
காதலைப் போலவே
காதலின் கதைகளும் தொடரும்...

----அனீஷ் ஜெ...

17 Oct 2012

ஐ லவ் யூ !

ஐ லவ் யூ !


செல்ல சண்டைகளின் முடிவில்
என் முகத்தில் ஒட்டிக்கிடக்கும்
சின்ன கோபங்களை
உன் உதடுகளால் ஒப்பியெடுக்கிறாய்...!

மிச்சமிருக்கும் கோபமும் - நீ
என் காதில் முனங்கும்
ஒற்றை வரியில்
ஒரேடியாய் மறைந்தே போகிறது...!

அன்பே...
மீண்டும் ஒருமுறை - நான்
பொய் கோபத்தோடு இருக்கிறேன்...!
என் கன்னத்தோடு
உன் உதடுகளை உரசி,
என் காதோடு
ஒருமுறை சொல்லிவிடு...!
ஐ லவ் யூ என்று...

----அனீஷ் ஜெ...


14 Oct 2012

10 Oct 2012

கண்ணாடி மனது !

கண்ணாடி மனது !


உன் கண்ணாடி மனதோடு
என் கண்ணெறிந்தேன் நான்...!

உன் வெட்கங்கள் உடைந்து
என் எதிரே
சிறு புன்னகையாய்
சிதறியது....!

உடைந்து கிடந்த
உன் புன்னகை துகள்களை
என் கைகளோடு அணைத்து
எடுத்துக்கொண்டேன் நான்...!

வலியே இல்லாத
வலிமையான முனைகொண்டு
அவைகள் என்
இதயத்தை கிழித்தன...!
காதலாய்...

----அனீஷ் ஜெ...



7 Oct 2012

மூழ்கிக்கொண்டிருக்கிறேன் நான்...

மூழ்கிக்கொண்டிருக்கிறேன் நான்...

  
மூச்சை அடக்கி
மூழ்குகிறேன் நான்...!

சலனங்கள் கூட எனக்குள்
சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது...!

மூச்சு காற்று கூட
புயலாய் தான் - என்னை
புரட்டிப்போடுகிறது...!

தத்தளிக்கிறேன் நான்...!
ஆனாலும்
தடுமாற்றமில்லை எனக்கு....!

கரைதொடும் முயற்சியில்
கரைந்தோடும் எனக்குள்,
வரைமுறைகள் இல்லாத
அரைகுறை எண்ணங்கள்...!

முழுதாய் நான்
மூழ்கிக்கொண்டிருக்கிறேன் நான்...!

பெண்ணே...!
விடிந்தபின்னாவது
கரை சேர்ந்து விடுவேனா..?
உன் தேகக்கடலில்
மூழ்கிக்கிடக்கும் நான்...

----அனீஷ் ஜெ...

30 Sept 2012

சோக கவிதைகள் !

சோக கவிதைகள் !


உன் நினைவுகளின்
வலிகளில் பாதியை,
என் நீல மை பேனாவுக்கு
பகிர்ந்தளித்தேன்...!

அழத்தொடங்கிய அப்பேனாவோ
அதன் கண்ணீர் துளிகளை,
காகிதத்தில் துடைத்துக்கொண்டது...!

காகிதத்தின் ஈரங்கள்
காதலின் - ஒரு
சோக கவிதையானது...

----அனீஷ் ஜெ...


25 Sept 2012

கண்டுபிடிப்பு !

கண்டுபிடிப்பு !


கற்கள் உரசிக்கொண்டால்
மட்டுமல்ல....
உதடுகள் உரசிக்கொண்டாலும்
தீப்பற்றிக்கொள்ளும்...!
கண்டுபிடித்து சொன்னது
காதல்...

----அனீஷ் ஜெ...


18 Sept 2012

தமிழ் கவிதையாகட்டும்...

தமிழ் கவிதையாகட்டும்...


தமிழின்
வார்த்தைகள் அனைத்தையும்
மிச்சமேதும் வைக்காமல்
மொத்தமாய் உச்சரித்துவிடு...!
அழகு தமிழின்
அத்தனை வார்த்தைகளும்
கவிதைகளாகட்டும்...

----அனீஷ் ஜெ...


14 Sept 2012

அவள் எழுதிய காதல் கவிதைகள் !

அவள் எழுதிய காதல் கவிதைகள் !


இதழ்களின் ஓரம்
ஈரம் வழிய செய்யும்
இனிமையான மொழி...!

வார்த்தைகளில்
தெறிக்கும் உஷ்ணம்...!

ஊமையான
உவமை வரிகளிலும்,
ஆயிரம் சத்தங்களின் சக்தி...!

இருவரிகளுக்கிடையில்
இருவரிகள் அடங்கிப்போகும்
மாயாஜால கோர்வைகள்...!

எத்தனைமுறை படித்தாலும்,
இன்னொருமுறை படிக்கவே
மனம் துடிக்கிறது...!
உதடுகளால் அவள் என்
உதடுகளில் எழுதும்
காதல் கவிதைகளை...

----அனீஷ் ஜெ...

11 Sept 2012

காதல் தோல்வி !

காதல் தோல்வி !


என் இமைகளை கடந்து
கண்ணீராய் வழிந்தோடும்
உன் நினைவுகளை,
உயிருக்குள் அடக்கிவைத்து
ஊமையாக அழுகிறேன்...!

என் இதயத்தை கிழித்துகொண்டு
வலிகளாய் கசிந்தோடும் - என்
காதல் குருதியை
நெஞ்சோடு மறைத்துவைத்து
செந்தீயில் வேகிறேன்...!

உன் ஞாபகங்களை சுவாசித்து,
உறங்காமல் உனையே யோசித்து,
காதலோடு காலந்தள்ளி,
நீ தந்த வலிகளை ஜெயித்தே
இன்னும் உயிர்வாழ்கிறேன் நான்...!
யாரோ சொல்கிறார்கள்
எனக்கு காதல் தோல்வியாம்...

----அனீஷ் ஜெ...


7 Sept 2012

நிர்வாண நிலவு !

நிர்வாண நிலவு !


இருட்டென்னும் ஆடையை
இழுத்து போர்த்திக்கொண்டு
இரவிலே வருபவள்,
இன்று ஆடை துறந்ததின்
இரகசியம் என்னவோ...?
பவுர்ணமி வானத்தில்
நிர்வாணமாய் நிலவு...

----அனீஷ் ஜெ...



4 Sept 2012

முதல் ரசிகை !

முதல் ரசிகை !


அவளை நிலவென்றேன்...!
அதை ரசித்தாள்...!!
அவளே எனக்கு உலகென்றேன்...!
அதற்கும் சிரித்தாள்...!!
என் கிறுக்கல்களுக்கு கைதட்டி,
என் உளறல்களையும் கவிதையென்று,
என்னை கவிஞனென்ற
என் முதல் ரசிகை அவள்...

----அனீஷ் ஜெ...



31 Aug 2012

மலராதே மலரே...

மலராதே மலரே...


அவள் பார்வை பட்டு
மொட்டொன்று எனக்குள்
முட்டி விரிவதை உணர்கிறேன்...!

வாழ்க்கையை வாசம் வீச வைப்பதாய்
வாக்குறுதி அளித்துவிட்டு
வளரப் பார்க்கிறது அந்த மொட்டு...!

ஏய் என் மனச்செடியே
விடியும் முன் - மொட்டு
விரியும் முன் - அதை
முளையிலே கிள்ளியெறிந்துவிடு...!

ஏனென்றால்
முழுதாய் விரிந்தபின்
வாடி உதிர்ந்துபோய் - உனக்குள்
காயம் ஏற்படுத்திவிடலாம்...!
காதலென்னும் அந்த மலர்...

----அனீஷ் ஜெ...





27 Aug 2012

திருக்குறள் !

திருக்குறள் !


ஏழு வார்த்தை வண்ணங்களால்
வானவில் எழுதிய வரிகள் நீ...!

முப்பாலில் மூன்றாம்பால்
உன் தேகமெங்கும் தஞ்சமிருக்க,
முதலிரண்டு பாலும்
உன் நெஞ்சோடு மிச்சமிருக்கிறது...!

அகிலத்தின் அத்தனை
அழகான அம்சங்களும்
உனக்குள் அடங்கிப்போக,
அதனுடன் சேர்ந்து நானும்...

வாசிக்கவும் தெரியவில்லை...!
நேசித்தும் உன்னை புரியவில்லை...!

பெண்ணே...!
ஐந்தரை அடியில்
பிரம்மன் எழுதிய
அழகான திருக்குறள் தான் நீ...

----அனீஷ் ஜெ...




20 Aug 2012

பிறந்தநாள் பரிசு !

பிறந்தநாள் பரிசு !


என்னவாயிருக்கும்
என எண்ணுகிறேன் நான்...!

எதுவென்றாலும்
அவள் காதலை விட
பெரிதில்லை என்கிறது
என் மனது...!

திறந்து பார்த்தவாறே
என் இதயத்தோடு மூடி
பத்திரப்படுத்திக்கொள்கிறேன் நான்...!
அவள் எனக்களித்த
பிறந்தநாள் பரிசை...

----அனீஷ் ஜெ...



17 Aug 2012

மறப்பதென்றால் மறுத்திருக்கலாம் !

மறப்பதென்றால் மறுத்திருக்கலாம் !


இதயம் கேட்டேன் நான்...!
இல்லையென மறுக்காமல்
இதயத்தை என்னோடு
இடம் மாற்றினாய் நீ...!

இன்றோ என்னிடம்
மறந்துபோக சொல்கிறாய்...!
இதற்கு நீ
அன்றே என்னிடம்
இதயம் தர மறுத்திருக்கலாம்...!
எனக்காய் துடிக்க
என் இதயமாவது
என்னிடம் மிச்சமிருந்திருக்கும்...

----அனீஷ் ஜெ...

29 Jul 2012

கவிதைப் புத்தகம் !

கவிதைப் புத்தகம் !


உனக்காய் துடிக்கும்
என் இதயத்தின் ஒலியையும்,
உன்மேல் நான் கொண்ட
காதலின் அளவையும்
உன்னைவிட நன்கு அறியும்...!
என் பேனா முனை கீறல்களையும்
என் காதலின் கிறுக்கல்களையும்
சுமந்துகொண்டிருக்கும் - என்
கவிதைப் புத்தகம்...

----அனீஷ் ஜெ...

5 Jul 2012

கனவு பொய்பட வேண்டும் !

கனவு பொய்பட வேண்டும் !

  
அது ஒரு
மழைக்கால இரவு...!

அடுத்தநாள் காலை
என்னை சந்திப்பதாய் சொன்னவள்
எதிர்பாராத விதமாய்
என் எதிரே வந்தாள்...!

என்னை கண்டதும் பூக்கும்
அவள் புன்னகை முகமோ
வாடிப்போயிருந்தது...!

என்னை பார்க்காதவள் போல்
முகம் திருப்பி நின்றாள் அவள்...!

அவளுடன் வந்த
இன்னொரு பெண்ணின் முகம்
எங்கேயும் பார்த்ததாய்
எனக்கு ஞாபகம் இல்லை...!
அது அவளின் தோழியாக இருக்கலாம்...!!

அவள் அருகில் சென்று
அவளின் பெயர் சொல்லி அழைத்தும்
எதுவும் பேசவில்லை அவள்...!

காகிதமொன்றை - என்
கைகளில் திணித்துவிட்டு
கண்ணீர் துடைத்தபடியே
கடந்து சென்றாள் அவள்...!

பிரித்து படித்ததும் - என்
உயிரே போய்விடும் போலிருந்தது...!
அது அவளின் திருமண அழைப்பிதழ்....

என் மூச்சே மெல்ல மெல்ல
நின்றுவிடுவது போல உணர்ந்தேன்...!
அதற்கு மேல் எனக்கு
எதுவும் ஞாபகமில்லை...!

அடுத்தநாள் காலை
விடிந்தபின்தான் தெரிந்தது..!
விடிய விடிய
நான் கண்டது கனவென்று...

கடவுளே - இந்த
கனவு பொய்பட வேண்டும்....

----அனீஷ் ஜெ...

30 Jun 2012

வேண்டுகோள் !

வேண்டுகோள் !


என்னை நீ
நேசிக்காவிடினும்,
என் கவிதைகளையாவது 

ஒருமுறை நீ
வாசித்துவிடு...!
உன் கண்கள் பட்டு,
உயிர் கொண்டு
என் கவிதைகளாவது
சுவாசிக்கட்டும்...!!

----அனீஷ் ஜெ...


23 Jun 2012

மழை... நீ... நான்...

மழை... நீ... நான்...


கொட்டும் மழையில்
குடையில்லாமல்
நனைகிறாய் நீ...!

ஈர உடை மறைக்கும் - உன்
தேக அடையாளங்கள்...!

உன் தேகம் நனைத்த துளிகள்
நதியாகிப்பாயும்
உன் இடையோரங்கள்....!

கண்டு நின்ற நானோ
குடையிருந்தும் நனைகிறேன்...!
மோக மழையில்...

----அனீஷ் ஜெ...

20 Jun 2012

வழிகாட்டி !

வழிகாட்டி !


விரல்களுக்கிடையில்
விளக்கு வெளிச்சம்...!
இரவு பகல் பாராமல்
வழிகாட்டுகிறது
கல்லறைக்கு...!!
சிகரெட்...

----அனீஷ் ஜெ...

8 Jun 2012

இதயம் கேட்கிறாய் நீ !

இதயம் கேட்கிறாய் நீ !


இதயம் கேட்கிறாய் நீ...!

கடனாய் அல்ல...
காதலுடனே தருகிறேன் நான்....!
என் இதயத்தை உனக்கு...

எடுத்துசென்றுவிட்டு,
என்றாவது ஒருநாள்
திருப்பி மட்டும்
தந்துவிடாதே...

உடைந்துபோய்,
உயிர் துறந்துவிடும்
என் இதயம்...

----அனீஷ் ஜெ...

3 Jun 2012

நீ வர வேண்டும்...

நீ வர வேண்டும்...


என் தெருவோரம்
எப்போதாவது
வருகிறாய் நீ...!

மழை வரும் நாட்களில்
மண்ணில் முளைக்கும்
காளான்கள் போல,
நீ வரும் நாட்களில்
என்னில் முளைக்கிறது
ஏதோ புதுவித உணர்வு...!

நீ வரும் வழியில் காத்திருந்து,
என் விழியெனும் ஜன்னலை திறந்து
காண்கிறேன் நான் உன்னை....

நீ பார்வை கோலமிட்ட
என் மன வாசலில்,
புள்ளிகள் கூட இப்போது
பூ பூத்து கிடக்கின்றன....!

ஒவ்வொரு முறையும்
ஓரப்பார்வை வீசி - நீ
என்னை தாண்டி செல்லும்போதும்,
இழுத்து மூடியிருந்த - என்
இதயக்கதவை திறந்துவிடுகிறேன்...!
என் இதயத்திற்குள்
நிரந்தரமாய் குடியேற
நீ வர வேண்டும் என...

----அனீஷ் ஜெ...

31 May 2012

உன் மனம் அறிய ஆவல்...

உன் மனம் அறிய ஆவல்...


உன் வானவில் பார்வையில்
என் இதயம் இப்போது
வளைவது போல் உணர்கிறேன்...!

பிரபஞ்சத்தின் அணுக்களெல்லாம்
உன் முக பிம்பங்கங்களையே
பிரதிபலிப்பது போல் காண்கிறேன்...!

என் தூக்கங்களை
தூக்கி சாப்பிடும்
உன் நினைவுகளோ,
என்னையும் இப்பொழுது
கொஞ்சம் கொஞ்சமாய்
கொன்று தின்கிறது...!

என் இரத்த நாணங்களில் கூட
உன் நாணம் பூசிய
சிணுங்கல் சிரிப்பே
நிரம்பி வழிகிறது...!

மறைத்து வைத்திருந்த - என்
மனக்கூட்டிலிருந்து
உரக்க கத்துகிறது...!
உனக்கான என் காதல்...

சத்தம் கேட்டதும்,
திரும்பி பார்ப்பாயா..?
விருப்பம் கொள்வாயா...??

காத்திருக்கிறேன் நான்...!

உன் மனம் அறிய ஆவல்...

----அனீஷ் ஜெ...

11 May 2012

உன் பெயர் சொல்லி...

உன் பெயர் சொல்லி...


அன்றொருநாள் என்னிடமிருந்து
பறித்தெடுத்து சென்றாய்...!
பின்பொருநாள் பாதிவழியில்
தூக்கியெறிந்து கொன்றாய்...!!
ஆனாலும் இன்னும்
உன் பெயர் சொல்லியே
உயிர் துடிக்கிறது...!
என் இதயம்...

----அனீஷ் ஜெ...

30 Apr 2012

காதல் பரிமாற்றம் !

காதல் பரிமாற்றம் !


என் மீசை நுனியில்
மிச்சமிருக்கும் - உன்
உதட்டுச்சாயமும்,
உன் தேகமெங்கும்
மோகம் பாய்ச்சிய
என் எச்சில் ஈரமும்,
தினம் தினம்
சொல்கின்றன...!
காதலில் பரிமாறப்படுவது
இதயம் மட்டுமல்ல என்பதை...

----அனீஷ் ஜெ...

27 Apr 2012

உயிர் பிழைத்திருக்கும் உன் நினைவுகள்...

உயிர் பிழைத்திருக்கும் உன் நினைவுகள்...


துடித்து அடங்கிய
என் இதயத்திற்குள்
இன்னும் உன்
நினைவுகளின் சத்தம்...!

எல்லாம் முடிந்துவிட்டதென
முடங்கிப்போய் கிடக்கும் - என்
மூச்சுப்பையினுள் - உன்
சுவாசத்தின் வாசனை...!

பாய்வதை நிறுத்தி
ஓய்ந்துபோய் கிடக்கும்
என் குருதி துளிகளில்
உன் காதலின் அசைவுகள்...!

இமைகளுக்குள் இருண்டுபோன - என்
பார்வை பகுதிகளில் - உன்
முக நிழலின்
முழுமையான தரிசனங்கள்...!

மரணித்துப்போய்விட்ட எனக்குள்
இன்னும் உயிர்பிழைத்திருக்கிறது...!
மரணிக்காத நினைவுகளாய்
உன் காதல்...

----அனீஷ் ஜெ...

9 Apr 2012

உன் குரல் கேட்க...

உன் குரல் கேட்க...


சிறுசிறு துளியாய்
சில்லென்ன்று பொழியும்
சிறு மழை தூறல் போல் - நீ
சிணுங்கி சிரிப்பாய்...!

கொஞ்சம் மவுன மொழியோடு
கொஞ்சும் காதல் மொழி சேர்த்து
காதல் தடவிய வார்த்தைகளாய் - என்
காதினிக்க பேசுவாய்...!

முத்தங்களோடு சேர்த்து
அதன் சத்தங்களையும்
எனக்குள் விதைப்பாய்...!

உன் வார்த்தைகளிலும்
வெட்கம் தெறிக்கும்...!
உன் மவுனத்தில் கூட
காதல் சுரக்கும்...!!

உன் சிணுங்கள் சிரிப்பு...!
உன் காதல் பேச்சு...!
உன் முத்த மொழி...!
இவையனத்தையும்
இன்று நான்
தொலைத்து நிற்கிறேன்...!

என் உயிரின் காதுகளை திறந்து,
உன்னை தவிர அனைத்தையும் மறந்து,
காத்திருக்கிறேன் நான்...!
மீண்டும் உன் குரல் கேட்க...

----அனீஷ் ஜெ...

24 Mar 2012

குட்டி காதல் கவிதைகள் !

குட்டி காதல் கவிதைகள் !


என் விழிகளுக்குள்
பார்வை விதைத்தாய் நீ...!
எனக்குள் முளைத்தது
காதல்...


*****




உன்னை எழுதி எழுதியே
என் பேனாவிலும்
கவிதைகளாய் கசிகிறது...!
உனக்கான என் காதல்...


*****



நமக்குள் தூரம் குறைய,
உன் உதடுகளில்
என் உதடுகளின் ஈரம் நனைய,
கட்டியணைத்தபடியே வளர்கிறது...!
நம் காதல்...

----அனீஷ் ஜெ...