![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLYi4qP_2NZQ2kpLmHfsnt1ZafDMjXIP73g5O2lDGhmNP2dKC_BjJlj-mmwSAJtfHDT-hiurT6YoIdh-k_5RNYyXCfmz6weQ2Yw-rAe-XIXS3UzPatwB5z49NWYcE2cxllaYbWr5s36D7J/s1600/anishj.in_067.jpg)
கல்லூரிக்கே இன்று
வராமலிருந்திருக்கலாம் என
கவலையோடு
நினைத்துக்கொள்கிறேன்...!
கலகலவென கதைபேசி,
அருகிலே இருக்கும்
அன்பு நண்பர்கள் கூட - இன்று
அன்னியமாய் தெரிகிறார்கள்..!
அறுசுவையில் உண்டாலும்,
மதிய உணவில்
ஏதோ ஒன்று குறைவதாய்
என் மனசு பிதற்றுகிறது...!
தூக்கம் வந்தாலும்
வகுப்பறையில் தூங்காதவன்,
தூக்கம் வராமலே - இன்று
தூங்க முயற்சிக்கிறேன்...!
எனக்கு பிடித்த
கணக்கு வாத்தியார் முதல்,
என்னை பிடிக்காத
கம்ப்யூட்டர் ஆசிரியை வரை
அனைவரும் இன்று
எதிரியாய் தெரிகிறார்கள்...!
இன்றைய பகல்பொழுது
வழக்கத்தை விட
நீண்டது போல்
ஒரு உணர்வு...!
இப்போதாவது நீ
புரிந்துகொண்டாயா?
நீ கல்லூரிக்கு வராத நாட்களில்
வெற்றிடம் விழுவது,
நீ அமரும்
கடைசி பெஞ்சில் மட்டுமல்ல...!
என் இதயத்திலும்தான் என்று...
----அனீஷ் ஜெ...