29 Dec 2010

இன்னும் உறங்காமல்...

இன்னும் உறங்காமல்...


இரவு முடிய,
இருளிலிருந்து விடிய
இன்னும் நேரமிருக்கிறது...!

நிலவு மறைய,
நீலவானம் தெரிய
நீண்ட நேரம் இருக்கிறது...!

உலகமே
உறங்கிக் கொண்டிருக்கும்
இந்த தருணத்தில்
இன்னும் உறங்காமல் - என்
இமைகளில் விழித்திருக்கின்றன...!
உன் நினைவுகள்...

----அனீஷ்...

26 Dec 2010

மனிதனாக பிறந்த இறைமகனே...!

மனிதனாக பிறந்த இறைமகனே...!


பூமியில் அன்பு
பூத்து குலுங்கவே
பூவாக மலர்ந்தவனே...!

பாலைவன இதயங்களும்
பசுமையாய் மாறிட
பாவிகளுக்காய் வந்தவனே...!

கல்வாரி மலையிலே
காயங்கள் பெறவே
கருணையோடு பிறந்தவனே...!

மனங்கள் எல்லாம்
மகிழ்ச்சியில் நிறைந்திட
மனிதனாய் உதித்தவனே...!

அகிலத்தார் நெஞ்சங்கள்
அமைதியில் திளைத்திட
அன்பாக முளைத்தவனே...!

மாட்டுத்தொழுவத்திலும் - இன்று
மனித மனங்களிலும்
மனிதனாக பிறந்த இறைமகனே...!

-----அனீஷ்...

17 Dec 2010

ஒரு துளி கண்ணீர்

ஒரு துளி கண்ணீர்


சுவாசமாய் என் உயிருக்குள்,
சுடராய் என் இதயத்தில்
எரிந்தவள் நீ...!

என் கவிதைகளுக்கும்,
உன் மவுனங்களில்
வார்த்தைகளை தந்தவள் நீ...!

இன்று ஏனடி நீ
என் இதயத்தை
சில்லாய் நொறுக்கிப்போகிறாய்...?

உயிருக்குள்
உனை வைத்தேன்...!
நீ ஏனடி - என் உயிரை
முள்ளாய் தைக்கிறாய்...?

என் கண்ணீரை - நீ
துடைப்பாய் என்றிருந்தேன்...!
நீ ஏனடி
என் கண்ணீர் மழை கண்டு
குடை பிடிக்கிறாய்...!!

என் வலிகளுக்கு கூட
நீதான் அழுதிருக்கிறாய்...!
இன்று நானோ அழுகிறேன்...!!
உன் இதயம் வலிக்கவில்லையா...?

என் உணர்வுகளும்,
நான் கொண்ட காதலும்
நீ விளையாடும்
பொம்மையானது ஏனோ...?
உன் காதல் - வெறும்
பொய் தானோ...?

காதல் பாஷை
கற்றுத் தந்தாய்...!
காற்றின் ஓசையிலும்
காதல் இசை மீட்டிச்சென்றாய்...!!
அவை கூட வெறும்
பொய் வேஷம் தானோ...?

நான் தூங்க
உன் இமை கேட்டேன்...!
நான் வாழ - உன்
இதயம் கேட்டேன்...!!
மறுத்திருந்தால் கூட
மன்னித்திருப்பேன்...!!!

ஆனால் நீயோ
தந்துவிட்டு ஏனடி
திருப்பிக்கேட்கிறாய்...?
பாதி பயணத்தில் ஏனடி
திரும்பிப்போகிறாய்...?

இப்போதோ உன்னை
மன்னிக்க மறுக்கிறதுதடி - என்
மனது...!

உடைப்பதுதான்
உனக்கு பிடிக்குமா...?
என் இதயமும்,
உன் சத்தியங்களும்
சில்லாய் சிதறி கிடக்கின்றன...!

பொய் காரணங்கள்
போதுமடி எனக்கு...!
மனமிருந்தால் இங்கு
மாற்கங்களும் உண்டு...!!

என் காதலை தவிர
என்னிடம் எதுவுமில்லை...!
உன்னிடம் தர...
இதனால்தான்
இப்போது விலகி செல்கிறாயா...?

இரக்கமில்லாதவளா நீ...?

நீ என்னை
ஏமாற்றவில்லை...!
நான் தான் உன்னிடம்
ஏமாந்து போனேன்...!!

உன்
வார்த்தை காதலால்
வலிபட்டு நிற்கிறேன்...!

வார்த்தையில் இல்லையடி காதல்...!
காதலுக்காய்
வாழ்ந்துகாட்டுவதில்தான்
வாழ்கிறது உண்மை காதல்...!!

தவறுகளை கூட
மன்னித்துவிடலாம்...!
ஆனால் பாவங்கள்
தண்டிக்கப்பட வேண்டும்...!!

என்றாவது ஒருநாள்
என் நினைவுகள்
உன் இதயத்தில் வரும்போது
உன் கண்கள் சிந்தும்
அந்த ஒருதுளி
கண்ணீர் துளியும்
உனக்கு தண்டனையே...

-----அனீஷ்...

 

9 Dec 2010

செல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்?

செல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்?


இதழ்கள் இல்லாமல் இசைக்கிறாய்...!
நீ இதயத்தின் ஓசையா...?
காதோடு தினம் பேசினாய்...!!
நீ அறிவியலின் பாஷையா...??

கைக்குள்ளே அடங்கினாய்...!
நீ ஹைக்கூ கவிதையா...?
கண்களுக்கு அதிசயமானாய்...!!
நீ காலம் சொல்லும் கதையா...??

விரல் நுனியில் விழிக்கிறாய்...!
நீ விஞ்ஞான வித்தையா...?
குட்டி கடிதம் சுமக்கிறாய்...!!
நீ மின்சார வார்த்தையா...??

உலகத்தை உன் கையில் ஏந்தினாய்...!
நீ ஹெர்குலஸ் சிலையா...?
உலகத்தை நீயே ஆள்கிறாய்...!!
நீ கடவுள் அறியாத கலையா...??

காற்றோடு குரலை கலக்கிறாய்...!
காசு தீர்ந்தால் கசக்கிறாய்...!!
ரீ-சார்ஜ் செய்தால் மீண்டும் பிறக்கிறாய்...!
ரிங்டோனாய் காற்றில் பறக்கிறாய்...!
செல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்
செல்போனே...

-----அனீஷ்...

5 Dec 2010

இதயம் தந்தால்

இதயம் தந்தால்


அன்பே! நீ
பார்த்து நின்றால்
சூரியன் கூட
எரிவதை மறக்கும்...!!

சிலையே! நீ
சிரித்துச் சென்றால்
மடிந்த மலர்களும்
மறுபடி உயிர்க்கும்...!!

பெண்ணே! நீ
பேசிச் சென்றால்
சங்கீதம் உன்னிடம்
சரிகம கற்க்கும்...!!

உயிரே! நீ
உன் பெயரை தந்தால்
ஒற்றை சொல்லில்
ஒரு கவிதை கிடைக்கும்...!!

கண்ணே! உன்
கால்கள் பட்டால்
கடற்கரை மணலும்
கல்வெட்டாகும்...!

என் இதயமே! நீ
உன் இதயம் தந்தால்
பூமியில் எனக்காய்
புதிய சொர்க்கம் பிறக்கும்...!!

----அனீஷ்...  

28 Nov 2010

அம்மா...

அம்மா...


உன் மூச்சு காற்றே
என் முதல் மூச்சானது...!
அம்மா என்று நான் அழைத்ததே
எனக்கு முதல் பேச்சாசானது...!!

நீ ஊட்டிய சோறே
எனக்கு அமுதமானது...!
நீ காட்டிய நிலவே
எனக்கு முதல் பொம்மையானது...!!

நான் சிரித்தால்
நீ சிரிக்கின்றாய்...!
நான் அழுதால்
நீயும் அழுகின்றாய்...!!
பிம்பமே இல்லாத
பிரமிப்பான கண்ணாடி நீ...

உயிர் தந்தவள் நீ...!
உடன் வருபவள் நீ...!!
கைதொடும் தூரத்திலிருக்கும்
கடவுளும் நீ...!!!

உயரம் கொண்ட
உன் அன்புக்கு கீழே,
சிகரங்கள் கூட
சிறியதாகிப் போகும்...!

உன் மடி மீது
கொஞ்சம் தலைசாய்த்தால்
வலிகள் கூட
சுகமாக மாறும்...!

இனியும் நான்
ஆயிரம் ஜென்மம் கண்டாலும்
தாயே - நான்
உன் கருவறையிலையே
உயிர் கொள்ள வேண்டும்...

-----அனீஷ்...

24 Nov 2010

உனக்குள் கரைகிறேன் நான்

உனக்குள் கரைகிறேன் நான்


என் விரல் தீண்டி
உன் விரதம் கலைக்கவா...?
என் எல்லையை தாண்டி
உன் வெட்கம் உடைக்கவா...??

உன் கூந்தலிலே - நான்
கூரை நெய்யவா...?
விடியும்வரை அதில் நான்
குடியிருக்கவா...??

உன் உதட்டோரம்
நான் பசி தொலைக்கவா...?
உன் உயிருக்குள்
நான் கசிந்து கரையவா...??

உன் நெஞ்சுக்கு
நான் மஞ்சமாகவா...?
உச்சம் தொடும்வரை - நான்
அதில் தஞ்சம் கொள்ளவா...?

உன் இடையோரம்
நான் விடை காணவா...?
தடையேதும் இல்லாமல் - நான்
உனை மேயவா...??

மேகமாய் உனக்குள் நான்
மோகம் வளர்க்கவா...?
முத்த மழையில் உன்னை நான்
மொத்தம் நனைக்கவா...??

----அனீஷ் ஜெ...

21 Nov 2010

ஹைக்கூ - உன் காதல்

ஹைக்கூ - உன் காதல்


என்னை கொல்வதற்கென்றே
பிறந்தவள் நீ...!
பக்கத்தில் இருக்கும்போது
பார்வைகளால்...
தூரத்தில் இருக்கும்போது
நினைவுகளால்...


***********************************************************************************

நல்ல மழை...!
நாம் இருவரும்
ஒற்றை குடையில்...!!
இருந்தும் நான்
முழுதாய் நனைகிறேன்...!!!
உன் காதலில்...

-----அனீஷ்...

18 Nov 2010

தண்டனைகள்

தண்டனைகள்


வழியெங்கும் என்னை
வரவேற்க்கின்றன...!
பள்ளங்களை மட்டுமே கொண்ட
பரிதாபமான பாதைகள்...
 
சில கணங்களில் என்னை
சின்னாபின்னாமாக்குகின்றன...!
விடைகளே இல்லாத கேள்விகளால் - நான்
விழிபிதுங்கி நிற்க்கும் தருணங்கள்...!!

என்னை புரிந்துகொள்ளாமல்
ஏளனம் செய்கின்றன...!
உணர்வுகள் இல்லாத
ஊனமான சில உள்ளங்கள்...

இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!

இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...

ஏமற்றங்கள்
என்னை ஒன்றும் செய்யாது...!
தண்டனைகள் என்னை
தகர்த்தும்விடாது...!!

அடிக்கடி நீ என்னை
ஆறாத வலிகளை
அடிநெஞ்சில் சுமக்கச்சொல்கிறாய்...!

தவறுகள் செய்யாமலே
தண்டனைகள் எனக்கு...

நீ தண்டிப்பதாய் நினைத்து,
நிர்ப்பந்தமாய் என்னை நீ
சிலுவையில் அறைவது
நியாயமாயிருக்கலாம் உனக்கு...!
அதிலொன்றும்
ஆச்சரியமில்லை...!!

ஆனால்
ஆணிகள் ஏன் என் இதயத்தில்...

-----அனீஷ்...

13 Nov 2010

நீ என்பவள்...

நீ என்பவள்...


அமாவாசை வானத்தின்
அடர்ந்த கருமேகம் உன் கூந்தலானது...!
ஆயிரம் கதைகள் சொல்லி
அது உன் இடை வரை ஊஞ்சலாடுது...!!

நீரிலே துள்ளும் - இரு
நீல மீன்கள் உன் கண்களானது...!
அது அசையும் ஓரப்பார்வையில்
என் நெஞ்சம் விண்ணில் பாயுது...!!

கட்டி இழுக்கும் - இரு
கறுப்பு கோடுகள் உன் புருவமானது...!
அது வளைந்திருப்பதால்
வானவில்லுக்கும் அதுவே உருவமானது...!!

பட்டிலே செய்த - ரோஜா
பூ மொட்டு இரண்டு உன் கன்னமானது...!
அதன்மேல் விழும் இரு குழியே - நான்
நீர் அருந்தும் கிண்னமானது...!!

தேனிக்கள் காணாத
தேன்கூடு ஒன்று உன் இதழானது...!
அதை காணும்போதெல்லாம் - என்
உதடுகள் ஏனோ பசிகொள்ளுது...!!

உலகின் அத்தனை மலர்களும்
ஒன்றாய் சேர்ந்து உன் கைவிரலானது...!
அது என்னை தொட்டுத்தொட்டு
பேசும்போது என் மனம் பறிபோகுது...!!

உன் பாதங்கள் வரையும்
சுவடுகள் கூட சுவாசம் கொள்ளுது...!
உனக்குள் என் இதயம்
இங்கே தொலைந்துபோகுது...!!

------அனீஷ்...

11 Nov 2010

ஹைக்கூ- குட்டி கவிதைகள்

ஹைக்கூ- குட்டி கவிதைகள்



நிலத்தில்தான்
நிற்க்கிறேன் நான்...!
ஆனாலும்
நிலவோ - கை
நீட்டித்தொடும் தூரத்தில்...!!
என் அருகில் நீ...


***********************************************************************************


நொடிக்கு
கோடி கவிதைகள் எழுதும்,
என் பேனா...!
உன் புன்னகையை
ஒரு துளி
மையாக்கினால்...


***********************************************************************************


அவளை நினைத்து
அவள் நினைவுகளுடன்
நான்...!
என்னை மறந்து
என் நினைவுகளில்லாத தனிமையில்
அவள்...!!


-----அனீஷ்... 

4 Nov 2010

நான்காண்டு நட்புக்காலம்

நான்காண்டு நட்புக்காலம்


நண்பா...!
நாம் கைகோர்த்து
நடந்த பாதைகளில்-இன்று
நட்பின் சுவடுகள்.....

சமாதானாமாவதற்க்காகவே
நாம் போட்ட
சின்ன சண்டைகளும்,
நான்காண்டுகள்
நம்மை சுமந்த
நான்காவது பெஞ்சும்
இன்றும்
என் மனத்திற்குள்...

எந்த இறப்புக்கும்
இத்தனை துளி
கண்ணீர் துளிகளை
சிந்தியதில்லை
என் கண்கள்...

இப்போதுதான் தெரிகிறது...!
மரணத்தைவிடவும்
இந்த பிரிவு
கொடியது என்று...

இரு உதடுகளாய்
நாம் இருந்து,
நாம் பிரிந்தால்தான்
வார்த்தையென்றால்
நான் ஆயுள் முழுவதும்
ஊமையாக வாழ்ந்திருப்பேன்.....

இரு இமைகளாய்
நாம் இருந்து
இப்போது பிரிவதென்றால்
நான் ஆயுள் முழுவதும்
இருட்டிலே கிடந்திருப்பேன்...

ஆனால்
நமக்குள் இருப்பதோ
ஒற்றை உயிரல்லவா....!

இந்த கவிதையில்
கலந்து கிடப்பது
கவலைகள் மட்டுமல்ல...!!
காய்ந்து போன-என்
கண்ணீர் துளிகளும் தான்...

இப்போது நாம்
பிரிந்தாலும்
இன்னும்
அடுத்ததாய் ஒரு
ஆயிரம் கோடி
ஆண்டுகளுக்கு
நான் உன் இதயத்திலும்
நீ என் இதயத்திலுமாய்
வாழ்ந்து கொண்டிருப்போம்...!
நினைவுகளாய் அல்ல...!!
நிஜங்களாய்...
நட்பின் நிஜங்களாய்....

-----அனீஷ்...

29 Oct 2010

தொலைக்கப்போவது அவள்தான்...

தொலைக்கப்போவது அவள்தான்...


என்னை கொஞ்சி பேசுபவள்
இப்போதெல்லாம் - என்னை
எதிர்த்து நிற்க்கிறாள்...!

அன்புக்கு பதிலாய்
அவமானங்களை தருகிறாள்...!

நல்லது கெட்டதை
நான் புரியவைக்கும்போது
அவளுக்கோ எரிச்சல் வருகிறது...!

என் வார்த்தைகளை
மதிக்காவிட்டாலும் பரவாயில்லை...!
அவளோ
மிதிக்கிறாள்...!!

இதயத்தை
இன்னொருமுறை
இரண்டாய் உடைக்கப்பார்க்கிறாள்...!

எனக்குதான்
வலிக்கிறது என்றாலும்,
என்னை
தொலைக்கப்போவது அவள்தான்...

-----அனீஷ்...

27 Oct 2010

என் இதயம்

என் இதயம்


ரத்தம் ஓடும் என் இதயம்
சத்தமாய்
கத்திக் கேட்கிறது....!
மொத்தமாய்
அவள் வேண்டும் என்று...

ஆரிக்கிள்களும் வெண்ட்ரிக்கிள்களும்
அவளை நினைத்தே
ஆயுளை நீட்டுகிறது...!

இப்போதெல்லாம் - என்
இதயாமோ
லப்-டப்பை மறந்து
அவள் பெயரைதான் சொல்கிறது...!

அவளுக்காய் துடிக்கிறது என் இதயம்...!
அவள் என்
அருகில் இல்லையென்றால்
கொஞ்சம் கொஞ்சமாய் வெடிக்கிறது...!

அவள் கிட்ட வந்தால் - என்
இதயம் சின்னதாய் சிரிக்கிறது...!
அவள் எட்ட நின்றால்
ஏனோ இதயம் வலிக்கிறது...!!

அவளை பைத்தியமாய் காதலிப்பது
நான் மட்டுமல்ல...!
எனக்காய் துடிப்பதாய்
நடித்துக்கொண்டு,
அவளுக்காய் மட்டும் துடிக்கும்
என் இதயமும்தான்...

-----அனீஷ்...

22 Oct 2010

அவள் ரசித்த கவிதை

அவள் ரசித்த கவிதை


காற்றோ மரங்களோடு
கைகலப்பு செய்துகொண்டிருந்தது...!

சிட்டுக்குருவிகளின்
சிணுங்கல் சத்தம்...!

சூரிய ஒளியோ
சுருங்கிப்போய்
நிலவு வர
வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது... !

மாலைநேரம் மங்கிப்போய்
மெல்லமாய்,
இரவு தொடங்கும் தருணம் அது...!

அந்த பூங்காவில்
அவனும் அவளும்...!

ஒட்டிப் பிறந்த
இரட்டை குழந்தைகள் போல்
தொட்டுக்கொண்டிருந்தனர்.. .!

இருவரும் காதலிக்க தொடங்கி
இரண்டோ மூன்றோ வருடங்கள்
ஆகியிருக்கலாம்...!

சின்ன கொஞ்சல்கள்...!
செல்ல கோபங்கள்...!!
மெல்லிய வருடல்கள்...!!!
இவைகளுக்கிடையில்
அவர்களின் பேச்சு
மூச்சு வாங்காமல்
நீண்டுகொண்டிருந்தது...!

சட்டைப் பையிலிருந்து
சட்டென்று ஒரு
காகிதத்தை எடுத்தான் அவன்...!

மூன்றாய் மடிக்கப்பட்டு
முழுவதும் கசங்கிப்போயிருந்தது...!
அந்த காகிதம்...

ஒருவேளை அது
கண்ணே மணியே என்ற
காதல் கடிதமாய் இருக்குமோ...?
யோசித்தாள் அவள்...!

அவன் பிரித்துப் படித்தான்...!
அவளோ மெல்லமாய் சிரித்தாள்...!

கடிதம் அல்ல அது...!
கவிதை...!!

வழக்கமான கவிஞர்களின் பல்லவி...!
நிலவு நீ..
நீலநிற வானம் நீ...

அவளுக்கு சலிக்கவில்லை...!
அதையும் ரசித்தாள்...!!

அங்கங்கே மெல்லமாய்
அங்கமெல்லாம் சிவக்க வெட்க்கப்பட்டாள்...!

கடைசியில்
கவிதை வாசித்து முடித்தான் அவன்...!
அவளோ புன்னகைத்தாள்...!!

கவிதை எப்படியிருக்கு
என்றான் அவன்...!

மறுநொடியோ
மனதார பாரட்டினாள் அவள்...!

கவிதை எழுதிய - இந்த
கைகளுக்கு
ஆயிரம் முத்தங்கள் கொடுக்கலாம்
என்றாள் அவள்...!

அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை...!
என்
நண்பனின் காதலியின் முத்தங்களை
என் கைகள்
என்றுமே
ஏற்றுக்கொள்ளாது என்று...

-----அனீஷ்...

21 Oct 2010

கவிதைகள் மரித்துவிடும்...

கவிதைகள் மரித்துவிடும்...


சுவாசமில்லாமல் கிடந்த - என்
கவிதைகளின்
மூச்சுப்பைக்குள் - உன்
காதலால்
காற்றை நிரப்பியவள் நீ...!

உடைந்துகிடந்த - என்
பேனா முனைகளுக்கு
உன் வார்த்தைகளால்
உயிர் கொடுத்தவள் நீ...!

எப்போதும் என்னை நீ
விட்டுவிலகி போய்விடாதே...!

என்னைவிட்டு - நீ
தூரம் போனால்
மறுபடியும் மரித்துபோவது
என் கவிதைகள் மட்டுமல்ல...!
என் உயிரும் தான்...
இன்னொருமுறை உடைந்து சிதறுவது
என் பேனாமுனை மட்டுமல்ல...!!
என் இதயமும் தான்...

-----அனீஷ்...

17 Oct 2010

நிசப்தத்தின் நடுவில்...

நிசப்தத்தின் நடுவில்...


இருட்டான இரவு...!

மெலிதான மழை தூறலும்,
மேகமூட்டமும்
மேலே தெரிந்த நிலவை
மெல்லமாய் மறைத்தது...!

காற்றோ
கறுப்பு இருட்டை
கட்டியனைத்து
காதல் செய்துகொண்டிருந்தது...!

எங்கும் நிசப்தம்...!

எல்லாரும் உணர்ச்சியற்று
உறங்கிக்கொண்டிருந்தனர்.. .!
உன்னையும், என்னையும்,
உன் செல்போனையும்,
என் செல்போனையும் தவிர...

-----அனீஷ்...
நான் இங்கு நலமில்லை

நான் இங்கு நலமில்லை


வலி கொள்ளும் நெஞ்சமோ
கொஞ்சம் கொஞ்சமாய்
பாலியாகிப் போகிறது...!

மனமோ
மரத்துப்போய்
மரணவலியில் துடிக்கிறது...!

திரும்பும் இடமெல்லாம்
தீயாய் சுடுகிறது வாழ்க்கை...!

உண்ணும் உணவை கூட
தொண்டைக்கு கீழே
அண்ட விடாமல்
தொந்தரவு செய்கிறது கவலைகள்...!

நரம்புகளிலெல்லாம்
குருதி கூட
ஓடாமல் அடம்பிடிக்க,
கண்ணீர் துளிகளோ
கன்னங்களில்
கங்கை நதிபோல்...

உச்சகட்டமாய்,
உயிரோ
உள்ளுக்குள் வெடிக்கிறது...!

எல்லாமே என்னை
கொல்ல நினைத்தாலும்,
எனக்குள்ளே எழுகிறது...!
ஏதேதோ கேள்விகள்...

எங்கிருக்கிறா
ய் நீ...?
எப்படி இருக்கி
றாய் நீ...??

விடை தெரியாமல்
விட்டு விட்டு
பைத்தியமாகிப்போகிறேன் நான்...!

எதுவுமே செய்ய முடியாமல்
ஏங்கி தேம்புகிறேன் நான்...!

கவலையோடு காத்திருக்கும்
நிமிடங்கள் தோறும்
கல்லறை எழுகிறது...!
என்னை சுற்றி...

சுவாசமாய் வந்தவள் நீ - என்
சுவாசம் பறித்து செல்லாதே...!
என் இதயமாய் துடிப்பவள் நீ - என்
இதயம் உடைத்து கொல்லதே...!!

நீ இல்லாத
சொர்க்கம் கூட
எனக்கு நரகம்தான்...!
நீ மறந்தால்
மறுகணமே எனக்கு
மரணம்தான்...!!

எங்கிருந்தாலும்
என்னருகில் வா நீ...!

என்னருகில் நீ இல்லாமல்,
நீ எப்படி இருக்கிறாய்
என்பதை கூட தெரியாமல்,
உன் நினைவுகளோடு சாகும்
நான் இங்கு நலமில்லை...

-----அனீஷ்...

16 Oct 2010

தொலைத்துவிடாதீர்கள்....

தொலைத்துவிடாதீர்கள்....


நிலவை தொலைத்த வானம்
அமாவாசையானது...!

வாசம் தொலைத்த பூவோ
சருகானது...!

நிஜங்களை தொலைத்த நிகழ்வுகள்
கதைகளானது...!

மழையை தொலைத்த மேகங்கள்
மறைந்தேபோனது...!

தொலைத்தவைகளை
கண்டெடுக்கலாம்...!
ஆனால்,
கண்டெடுத்தவைகளை ஒருபோதும்
தொலைத்துவிடாதீர்கள்....

-----அனீஷ்...

 

13 Oct 2010

ஏனோ நான்....

ஏனோ நான்....


கனவுகள்
கலைந்துவிடுமோ
என்ற பயம்...!

பார்ப்பதை விட,
அழுவதையே
அதிகம் விரும்பும்
என் கண்கள்...!

என் பேனாவுக்கு
கவிதை எழுதும் சக்தியை
கொடுத்து விட்டு,
என் இதயத்திற்கு
தாங்கும் சக்தியை
தர மறந்த கடவுள்...!

வழி தெரியாத வாழ்க்கையில்
அடிக்கடி
தனியாகி போகும் நான்...!

எதற்க்கும் பயன்படாமல்
வீணாகிபோகும் என் ஜென்மம்...!

எவற்றிற்கெல்லாமோ
காத்திருந்து
களைத்துப்போய்
கடைசியாய்
மரணத்திற்க்காய்
காத்திருக்கும் மனம்...!

எல்லாமே எனக்கு
எதிராய் இருந்தாலும்,
என்னை யாரும்
ஜெயித்துவிடுவதில்லை...!
ஏனோ நான் தான்
தோற்றுப்போகிறேன்...!!


-----அனீஷ்...

10 Oct 2010

கானல் ஆகும் கனவுகள்

கானல் ஆகும் கனவுகள்


சகதியாய் கிடக்கும் சாலை...!
அழுக்கடைந்த தெருக்கள்...!!
இவைகள் தான் -என்
விளையாட்டு மைதானம்...

பனிரெண்டு வயதாகிறது...!
பசியை தவிர எதையும்
அதிகமாய் ருசித்ததில்லை...!

கடந்த ஆண்டு
கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் தந்த
காக்கி கலர்
கால்சட்டை
இப்போதும்
இடுப்பில் நிற்க்கவில்லை...!

ஓடாமல் கிடந்த சைக்கிளின்
ஒற்றை டயர் ஒன்று
நான் ஊர் சுத்தும்
பென்ஸ் கார் ஆகிறது...!

பழைய கஞ்சியும்
பச்சை மிளகாயும் தான்
எப்போதாவது
என் பசியை போக்குகிறது...!

ஐந்துமணி வரை பள்ளிக்கூடம்...!
அதற்கு மேல் கபடி ஆட்டம்...!!
சின்ன சின்னதாய் இப்படி
சில சந்தோஷங்கள்...!!!

கடந்த மாதம்
காசுக்கு வழியில்லை என்று
கல் உடைக்க போகச் சொல்லி
கட்டளையிட்டாள் அம்மா...

மறுத்த போதும்
மனமிரங்கவில்லை அம்மா...!
கனவுகளெல்லாம் இப்போது
கானல் ஆனது...!!

படித்த
பள்ளிக்கூடத்தை
கடந்து செல்லும்போதெல்லாம்
கனமாகிறது மனது...

உச்சி வெயிலில் நின்று
கல் உடைக்கும் போது
மனசும் சேர்ந்து உடைகிறது...!
நான் பணக்காரனாய்
பிறந்திருக்க கூடாதா....

-----அனீஷ்...

1 Oct 2010

மத கத்திகள்

மத கத்திகள்



காற்றிலே மிதப்பவன் நீ...!
கல்லிலே இருப்பவன் நீ...!!
கல்லாகவே ஆனதென்ன...?
சூரியனாக ஒளிர்பவன் நீ...!
சுவாசமாக வருபவன் நீ...!!
சுவடே இல்லாமல் நடப்பதென்ன...?

இங்கே பகைமை தலையை கொய்ய,
இரத்தமோ மழையாய் பெய்ய,
இன்னும் அங்கே நீ செய்வதென்ன...?
உன் பெயரை சொல்லி ஊர் எரிய,
உயிர்கள் உயிருக்காய் போர் புரிய,
ஊமையாய் நீ சிரிப்பதென்ன...?

மனிதனை படைத்து நீ
கடவுளானாய்...!
மதங்களை படைத்து
மனிதர்கள் இப்போது
கடவுளானார்கள்...!!
பாவம் நீ...

மதங்கள் மதிக்கப்பட - அதற்காய்
மனங்கள் மிதிக்கப்பட
எல்லாமே இங்கு
தவறானதென்ன...?

உயிர்களை பறிப்பதும்
இதயங்களை உடைப்பதும்
அன்பை அறுப்பதும்தான்
மதங்களின் கடமையா...?

கிறிஸ்தவன்
கீதை படிக்கலாம்...!
அப்துல்லா
ஆலயத்திற்கு செல்லலாம்...!!
குருவாயூரப்பனின் பக்தன்
குல்லாவும் அணியலாம்...!!
தவறேதும் இல்லையே...
எல்லோருக்கும் இதை நீ
எப்போது சொல்லப்போகிறாய் கடவுளே...?

கடவுளே...!
மறைந்திருப்பதை விட்டுவிட்டு
இப்போதாவது நீ பேசு...!!
இல்லையென்றால்,
மனித ரத்தம் சொட்டும்
மனிதர்களின் மத கத்திக்கு
என்றாவது ஒருநாள்
நீயும் பலியாகவேண்டியிருக்கும்...

-----அனீஷ்...

29 Sept 2010

ஹைக்கூ.... உன்னோடு சேர்ந்து...

ஹைக்கூ.... உன்னோடு சேர்ந்து...


நடக்கும்போது சுகமாயிருக்கிறது...!
தனியே நிற்க்கும்போது வலிக்கிறது...!!
தயவுசெய்து என்னோடு வா...!
இன்னும் கொஞ்சதூரம்
நடக்கவேண்டும் நான்...!!
உன்னோடு சேர்ந்து...


***********************************************************************************

தென்றலும் அவளும்
ஒன்றுதான்...!
நெஞ்சோடு உணர்ந்தேன் நான்...!!
அவள் என்னை
தழுவும்போது...

-----அனீஷ்...

23 Sept 2010

போதும் இந்த பொல்லாத வாழ்க்கை

போதும் இந்த பொல்லாத வாழ்க்கை


முகமூடிகளை அணிந்துகொண்டு
முன்னுக்குப்பின்
முரணாகப் பேசும் மூடர்கள்...!

நம்பிக்கைகளுக்கும்
நம்பிக்கை துரோகத்திற்க்கும் இடையில்
நடைபிணமாகும் உயிர்...!

விழிகளில் நீரை வழியவிட்டு
விவாதம் செய்யும்
வீணாய்போன மனிதர்கள்...!

மனதோடு இருந்துவிட்டு - அந்த
மனதையே உடைத்து விடும்
மனித கூட்டம்...!

கனவுகளை புதைக்க சொல்லி
கல்லறைகளை உயிர்ப்பிக்கும்
சந்தர்ப்பவாதிகள்...!

ஏய் கடவுளே...
போதும் எனக்கு இந்த
வெறுத்துப் போகும்
பொல்லாத வாழ்க்கை...!

என் மூச்சை நிறுத்தி
என் இதயத்தை இறக்கவிடு
இப்போதே...

கடவுளே...!
கடைசியாய் ஒரு வேண்டுகோள்...!!
இன்னொரு ஜென்மம்
இனியும் எனக்கு தந்தால்
தயவுசெய்து நீ
மறுபடியும் என்னை
மனிதனாக மட்டும் படைத்துவிடாதே...

-----அனீஷ்...
வாழ்க்கை

வாழ்க்கை



நிஜங்களுக்கும்
நிழல்களுக்குமிடையில்
நிலைதடுமாறும் வயது...!

நம்பிக்கைகளுக்கும்

சந்தேகங்களுக்குமிடையில்
சஞ்சலப்படும் மனது...!

அன்புக்கு

அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும் மனிதர்கள்...!

கன்னத்தில் வழியும்

கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும் உலகம்...!

விரல்பிடித்து நடப்பதாய்

விளக்கம் சொல்லிவிட்டு
விலகிச் செல்லும் சிலர்...!

எவரிடத்தில்

எதையோ எதிர்பார்த்து
ஏமாந்து நிற்கும் இதயம்...!

தன்னம்பிக்கையோடு பயணிக்க சொல்லி

தயங்காமல் அழைக்கும்
தவறான பாதைகள்...!

கண் மூடினால் தெரியும்

கனவுகளை கூட
நிஜமென்று நம்பும் கண்கள்...!

முயன்றாலும் கிடைக்காததை

முழுமுயற்சியோடு தேடும்
முட்டாள்தனமான சில தேடல்கள்...!

தந்த இதயத்தை

தவறாமல்
திருப்பி வாங்கும் ஒருவர்...!

சந்தோஷங்களை பறித்துவிட்டு

கவலைகளை மட்டும் தரும்
காலச் சக்கரம்...!

இதுதான் வாழ்க்கை என்றில்லை...!

இவ்வளவுதான் வாழ்க்கை...


-----அனீஷ்...

17 Sept 2010

நீ இல்லை என்றால்...

நீ இல்லை என்றால்...


கால்கள் முளைத்த
நிலவாய் நின்றாய்...!
காற்றில் மிதக்கும்
இசையாய் வந்தாய்...!!

சுவாசத்தில் புகுந்து

உயிருக்குள் கலக்கிறாய்...!
நினைவுக்குள் நீயும்
நிஜங்களாய் மிதக்கிறாய்...!!

இதயத்தில் எனக்கொரு

இடம் தர மறுக்கிறாய்...!
தூரத்தில் இருந்தும்
தூக்கம் கெடுக்கிறாய்...!!

தினசரி கனவில்

தரிசனம் தந்தாய்...!
முகத்தை மறைத்து -என்னை
முழுதாய் கொன்றாய்...!!

இரவுகள் உன்னால்

நரகமானதே...!
இமைகளும் இப்போது
சுமைகளானதே...!!

இதயத்தின் துடிப்பு

இடியாய் கேட்குதே...!
உயிரும் உன்னால்
உடைந்து போகுதே...!!

சுவரங்கள் ஏழும் -உன்
குரலில் எதிரொலிக்குதே...!
நீ கொஞ்சம் சிரித்தால் -என்
நெஞ்சுக்குள் இசை தெறிக்குதே...!!

கண்ணே...! உன்னோடு வாழ
காத்திருக்கிறது என் உயிர்...!
நீ இல்லை என்றாலோ
நீடிக்காது இந்த உயிர்...!!

-----அனீஷ்...

16 Sept 2010

பிரிந்துவிடாதே என்னை...

பிரிந்துவிடாதே என்னை...


இயங்காமல் கிடந்த -என்
இதயத்துடிப்பின்
இடைவெளிக்கிடையில்
இசையை ஊற்றியவள் நீ...!

நிர்வாணமாய் கிடந்த -என்

நித்திரைக்கு
கனவுகளால்
ஆடை நெய்தவள் நீ...!

பச்சை நரம்பின்

பகுதி ஒவ்வொன்றிலும்
பரவசம்
பாய்ச்சியவள் நீ...!

உடைந்து கிடந்த -என்

உயிர் சிறகுகளை
ஓரப்பார்வைகளால்
ஒட்ட வைத்தவள் நீ...!

பேசத் தெரியாத -என்

பேனா முனைகளுக்கு
கவிதை பேச
கற்றுக் கொடுத்தவள் நீ...!

என் மூச்சுப்பையின்

ஏதோ ஒரு முனையில்
எனக்கு எல்லாமாய்
கலந்து கிடப்பவள் நீ...!

நட்பாய்,

கடைசியில் காதலாய்
மனதை
மழையாய் நனைத்தவள் நீ..!

இதயத்தில் அல்ல -உன்னை
உயிரில் சுமக்கிறேன் நான்...!
பிரிந்துவிடாதே என்னை...!!
மரித்துப் போய்விடுவேன் நான்...

-----அனீஷ்...

15 Sept 2010

காதல் வரும் நேரம்

காதல் வரும் நேரம்


மனமோ இங்கு
மழையில் நனையும்...!
உணர்வுகள் மெல்ல
குடையாய் விரியும்...!!

கால்கள் இரண்டும்

காற்றில் பறக்கும்...!
கைகளில் மெதுவாய்
பொய் சிறகுகள் முளைக்கும்...!!

விழிகள் இரண்டும்

உறக்கம் மறக்கும்...!
கனவில் புதிதாய்
நிறங்கள் பிறக்கும்...!!

உளறும் வார்த்தைகள்

கவிதைகளாகும்...!
மவுனங்கள் கூட
இசைகளாகும்...!!

உயிருக்குள் புதிதாய்

உயிரொன்று சேரும்...!
இதயம் நொடிதோறும்
இறந்து பிறக்கும்...!

எல்லாம் இந்த

காதல் வரும் நேரம்...

-----அனீஷ்...

14 Sept 2010

உன் காதல் கொடு

உன் காதல் கொடு


உன்னை பார்த்து செல்ல
பகலில் சூரியனும் உதிக்குதே...!
இதயமே...! இரவில் உன்னை
நிலவு வந்து ரசிக்குதே...!!

கண்ணாடி வானமும் -உன்

முன்னாடி உடையுதே...!
பெண்ணே...! உன்னை கண்டு
வெண்மேகம் உருகுதே...!!

உன் கூந்தலில் ஒட்டிக்கொள்ள

கோடி பூக்கள் வேண்டுதே...!
தேவதையே...! தென்றலும் உன்னை
தேடி வந்து தீண்டுதே...!!

உன் பாதம் பட

பாதைகள் தவம் கிடக்குதே...!
அழகே...! உன்னை தேடி இப்போது
அந்த வானவில்லும் நடக்குதே...!!

உன் கைகள் பட்டால்

காகிதப் பூக்கள் கூட
கண் திறக்கும்...!
அன்பே...! உன் காதல் கொடு -என்
இதயம் உனக்காய்
இன்னொருமுறை பிறக்கும்...!!

----அனீஷ்...

13 Sept 2010

நினைவுகள் போதும்...

நினைவுகள் போதும்...


மாறிக்கொண்டிருக்கும்
மனித வாழ்க்கை...!
தொலைப்பதற்க்கு எதுவுமில்லாதபோது
தேடுவதற்க்கும் இங்கு வழியில்லை...!!

கடைசிவரை -நான்

காப்பாற்றி வைத்திருந்த -என்
இதயம் அவளிடத்தில்
இப்போது தொலைந்துவிட்டது...

அவளுக்கும் எனக்குமிடையில்

அதிக துரம்...!
ஆனால் இதயங்களோ
அருகருகில்...!!

சுடும் என தெரிந்தும்

சூரியனை பிடிக்க ஆசைப்படுகிறேன்...!
எட்டாது என தெரிந்தும்
எட்டிப் பிடிக்க முயலுகிறேன்...!!

மறுத்துப் போகவும்

மறந்து செல்லவும்
மனதிற்க்கு தெரியவில்லை...!

தவறு என தெரிந்தும்

திருத்திக்கொள்ள மனமில்லை...!
தவறான பாதை என்றாலும்
திரும்பிப்போக விருப்பமில்லை...!!

அவளை பிரியும்போது கூட
அழமாட்டேன் நான்...!
கண்ணீர் துளியாய் அவள்
கரைந்து போய்விடுவாள் என்பதால்...

அவளிடம் தொலைத்த
என் இதயத்தை
அவளிடமே விட்டுப்போகிறேன்...

எனக்கென்று
அவள் இல்லையென்றாலும்
ஆயிரம் ஆண்டுகள்
நான் வாழ்ந்துவிடுவேன்...!
அவளின் இந்த நினைவுகளுடன்....
 
-----அனீஷ்...

9 Sept 2010

ஹைக்கூ.... நீ...!!!

ஹைக்கூ.... நீ...!!!


எந்த மலரும்
இத்தனை நிறமில்லை...!
கோபத்தில் சிவக்கும்
உன் கன்னங்களை விட...


***********************************************************************************

கடற்கரை மணலில்
கவிதைப் புத்தகம்...!
உன் காலடிச் சுவடு....


***********************************************************************************

மழையில் நனைகிறது
வானவில்...!
மழையில்
குடையில்லாமல்
நீ...

-----அனீஷ்...
என்ன தரப்போகிறாய் நீ எனக்கு...

என்ன தரப்போகிறாய் நீ எனக்கு...


பூவா -இல்லை நீ
பூகம்பமா...!
நிலவா -இல்லை நீ
நிஜமில்லையா...!!

ஆறடி உயரத்தை

அதற்க்குள்ளே மோகத்தை
அமிலமாய் ஏன் தெளித்தாய்...!

இளமையின் ஈரத்தை

இதயத்தின் ஓரத்தை
இரு விழிகளால் ஏன் அறுத்தாய்...!

ராத்திரி நிலவாய்

ரகசிய கனவில்
ரதியே ஏன் நுழைந்தாய்...!

ஏதோ சொல்லும் பார்வையை

என்னை கொல்லும் காதலை
எனக்குள்ளே ஏன் விதைத்தாய்...!

இறக்குது இதயம் -உன்

இருவிழி பார்வையில்...
பறக்குது மனது -உன்
பார்வையின் சிறகினில்...

மறுப்பதில் நியாயமில்லை

மனதை எனக்கு தந்துவிடு...!
மனதை நீ தரமறுத்தால்
மரணத்தையாவது எனக்கு கொடு...!!

 

-----அனீஷ்...

8 Sept 2010

நீ...

நீ...




கோடி நிலா
கூடி வந்ததுபோல்
உன் முகம்...
பவுர்ணமி நிலா கூட
பார்ப்பதற்கு இவ்வளவு அழகில்லை...!

வெள்ளை நதியில்
துள்ளி விளையாடும் -இரு
புள்ளி மீன்களாய்
உன் கண்கள்...

பிரம்மன் என்னை விட
பிரமாதமாய் கவிதை எழுதுகிறார்...!
கவிதையாய் உன் இரு
கன்னங்கள்...

இருவரி கவிதையாய் -உன்
இரு இதழ்கள்...!
அது உதிர்க்கும் வார்த்தைகளோ -என்
அடிநெஞ்சில் இசையாய்...

இருட்டை விழுங்கும்
இரவு நேர நட்சத்திரங்கள்...!
உன் கூந்தலிலிருந்து
உதிரும் பூக்கள்...

உன் கை பட்ட
உன் பேனாவின்
கிறுக்கல்கள் கூட
கவிதைகளாகும்....

கடற்கரை மணலில் -உன்
கால்கள் பதித்த சுவடுகளை -அந்த
கடல் அலையும் ஒருவேளை
காதலிக்கும்...

அழகு என்பது வெறும்
சொல் மட்டும் இல்லை...!
நீ இல்லை என்றால்
அழகென்ற சொல்லே இல்லை...!!


-----அனீஷ்...

7 Sept 2010

எதிரில் நீ...

எதிரில் நீ...

ஆயிரம் சிறகுகள் முளைத்து
ஆகாயத்தில் பறக்கிறேன் நான்...!


சுவாசிக்கும் காற்றிலோ
சூரியனின் வெப்பம்...!


இதயமோ துடிப்பதாய் நடித்து
இடைவெளியில்லாமல் வெடிக்கிறது...!


மனதின் வார்த்தைகளோ
மவுனங்கள் பட்டு உடைகிறது...!


எனக்கே தெரியாமல்
ஏதேதோ ஆகிறது எனக்கு...!


என் எதிரில்
நீ வரும்போது...


-----அனீஷ்...

6 Sept 2010

நீயும்... உன் நினைவுகளும்...

நீயும்... உன் நினைவுகளும்...


சுவாசிக்கும் காற்றிலும்
சுவடுகளில்லாமல்
சுற்றி வருகிறாய் நீ...!

ஊமையான என் இதயத்தை
உன் பெயர் சொல்லி
உரக்க கத்தவைக்கிறாய் நீ...!

பேசும் வார்த்தைகளில்
பாதி வார்த்தைகளுக்கு
பதிலகிறாய் நீ...!

ராத்திரி கனவுகளில்
ரகசியமாய் புகுந்து
ரகசியம் பேசுகிறாய் நீ...!

காற்றில்லாமல் ஒருவேளை
வாழ்ந்துவிடுவேன் நான்...!
ஆனால் மரித்துப்போய்விடுவேன்... !!
நீயும்
உன் நினைவுகளும்
இல்லாமல் போனால்....


------அனீஷ்...

3 Sept 2010

கொஞ்சம் கொஞ்சமாய்...

கொஞ்சம் கொஞ்சமாய்...


கொஞ்சம் கொஞ்சமாய்
உனக்குள் சரிந்தேன்...!
நீ பேசும் கணங்களில்...
மெல்ல மெல்லமாய்
உயிர் போகாமல் மரித்தேன்...!!
நீ சிரிக்கும் தருணங்களில்...

தட்டுத்தடுமாறி
விழுந்தேன் எழுந்தேன்...!
உன் கன்னக்குழியில்...
தொட்டு சூடேறி
புதைந்தேன் தொலைந்தேன்...!!
உன் நெஞ்சுக்குழியில்...

பனித்துளியாக உருகி
விண்வெளியோடு பறந்தேன்...!
தூரத்தில் நீ என்னை பார்க்கும்போது...
புல்வெளிமேலே பூக்கும்
மழைத்துளியாகிப் போனேன்...!!
தூக்கத்தில் உன் கனவுகள் என்னை தாக்கும்போது...

என் செல்கள் எல்லாம்
சில்லாக உடையும்...!
நீ இல்லை என்றால்...
சொல்லாத ஆசைகள்
மெல்லமாய் கைகூடும்...!!
நீ என் அருகில் நின்றால்...



-----அனீஷ்...

எனக்கும்... உனக்கும்...

எனக்கும்... உனக்கும்...



ஒற்றை புள்ளி நிலவை
மொட்டை மாடியிலிருந்து ரசிப்பது
எனக்கு பிடிக்கும்...!
உனக்கும் அது பிடிக்கும் என்பதால்...

அரைகுறையாய் தெரியும் -அந்த

பிறை நிலவில் பாதியை
எனக்கு பிடிக்காது...!
உனக்கு அது பிடிக்காது என்பதால்...

கொட்டும் நல்ல மழையில்

பட்டும் படாமல் நனைவது
எனக்கு பிடிக்கும்...!
உனக்கும் அது பிடிக்கும் என்பதால்...

கண்ணிமைக்கும் நொடியில் வரும்

மின்னல் ஒளி
எனக்கு பிடிக்காது...!
உனக்கு அது பிடிக்காது என்பதால்...

காற்றோடு மோதி

காதல் செய்யும் பூக்களை
எனக்கு பிடிக்கும்...!
உனக்கும் அது பிடிக்கும் என்பதால்...

அழகான பூக்களுக்கிடையில்

அசிங்கமான முட்களை
எனக்கு பிடிக்காது...!
உனக்கு அது பிடிக்காது என்பதால்...

சுகமாய் காதுகளை வருடும்

சுப்ரவாதம்
எனக்கு பிடிக்கும்...!
உனக்கும் அது பிடிக்கும் என்பதால்...

புரியாத வார்த்தைகள் கொண்ட

புதுப்பட பாடலொன்று
எனக்கு பிடிக்காது...!
உனக்கு அது பிடிக்காது என்பதால்...

உனக்கு பிடித்தவைகளெல்லாம்

எனக்கும் பிடிக்கும்...!
உனக்கு பிடிக்காதவைகளை
எனக்கும் பிடிப்பதில்லை...!!

இப்போது தெரிகிறதா...?

என்னை ஏன்
எனக்கே பிடிக்கவில்லை என்று...


-----அனீஷ்...