![anishj kavithai](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXF27U7FUv_Ly53d-vDY7RLQnJI083faQTJBrWOZ7bQaqbEr4X8mYHfsvz-1GO0tKce-YyrDnsMIbA16Z02v73ljzq1nbchySfxxKzQOKmzfRT9TWykyylX6Ujf94EGFkJveYLaGPOk9IP/s1600/anishj_kavithai.jpg)
கடும் வெயிலில் - உன்
கழுத்தோரம்
விழுந்தோடும்
வியர்வை துளிகளாய்,
உனக்குள் உருண்டோடி - உன்
உயிரை தொட்டு
உலர்ந்து போகிறது என் நினைவுகள்...!
துடைத்தெறியப்பட்ட
துளி திரவத்தின் ஈரமாய்,
இன்னும் இருக்குறேன் நானுன்
இதயத்தின் ஓரம்...!
வெயில் விட்டு
மழை கொட்டும் காலங்களில்
மறைந்து போகும்
வியர்வை துளிகளாய் - என்
நினைவுகளை
நீ மறந்துபோய்விடாதே...
மழை காலங்களுக்காய்,
வெயிலை கொஞ்சம்
பத்திரப்படுத்திக்கொள்...!
என் நினைவுகளுக்காய்
என் காதலையும்...
---- அனீஷ் ஜெ...