![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFYalCrea2llLSb6eIAaSStzI7mYsNyBg57ZXxLG-7LjDJaccYoCgA_gAXhgyNOXOKQIL0Kl9nzNLVly8EvAEv5ji-rrEU9XhC5wk6HBxexq5jU8dBIWtsG95O0oYKKY4v_TTwINI1kd-O/s1600/anishj.in_104.jpg)
அவள் பார்வை பட்டு
மொட்டொன்று எனக்குள்
முட்டி விரிவதை உணர்கிறேன்...!
வாழ்க்கையை வாசம் வீச வைப்பதாய்
வாக்குறுதி அளித்துவிட்டு
வளரப் பார்க்கிறது அந்த மொட்டு...!
ஏய் என் மனச்செடியே
விடியும் முன் - மொட்டு
விரியும் முன் - அதை
முளையிலே கிள்ளியெறிந்துவிடு...!
ஏனென்றால்
முழுதாய் விரிந்தபின்
வாடி உதிர்ந்துபோய் - உனக்குள்
காயம் ஏற்படுத்திவிடலாம்...!
காதலென்னும் அந்த மலர்...
----அனீஷ் ஜெ...