![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk1Kz4Aez19JJe5WYnz1E8IymuF0sm7m__HVFFr7x_3yUmotoPfUTnF_Utv5KkOYo6Bpks6YaXoWpjY2kbUw7htDXCiP4K6R4UFE9rR7ps0n3FZi4b2TfY-3hEnxQSw9eI7vJLOwLmlS-h/s1600/anishj.in_145.jpg)
குடையின்
கைப்பிடியில்
சத்தமில்லாமல்
உரசிக்கொள்கிறது...!
நம் கைவிரல்கள்...
என் விரல்களோ
உன் விரல்கள் மேல்
இரகசியமாய்
இடப்பெயர்ச்சி செய்கிறது...!
கடும் குளிரிலும் - உன்
கை விரல்கள் மேல்
மின்னலின் வெப்பம்...!
நெளியும் - உன்
விரல்களில் கூட
வழிந்தோடுகிறது
வெட்கங்கள்...
இறுக்கி பிடித்ததும்
அடங்கிப்போன
உன் விரலசைவில்
கிறங்கிப்போகிறது மனது...!
எனக்கே தெரியாமல்
உனக்குள் மூழ்குகிறேன் நான்...!
இந்த மழை மட்டும்
நிற்காமல்
நீடிக்க வேண்டும்...!
உன் காதலில் - நான்
மூழ்கி முடியும் வரை...
----அனீஷ் ஜெ...