28 Feb 2018

உலகம் ஆனாய் !


சாயம் போன மேகம் போலே
சாயங்கால வானம் போலே
உளிபடாத கல்லை போலே
எழுதிடாத சொல்லை போலே
வெறுமை தீயில்
வெந்து கிடந்தேனே...!

நடு இரவில் நிலவை போலே
சுடும் வெயிலில் குளிரை போலே 
வெறும் நிலத்தில் பூவை போலே
பெரும் கடலில் தீவை போலே
நீங்கா நிழலாய்
நீயும் வந்தாயே...!

கொட்டி தீர்க்கும் 
காதல் கொண்டாய்...!
தொட்டு தூங்க
தோள்கள் தந்தாய்...!
முட்டிமோதும் முத்தத்தாலே
முழுதாய் கொன்றாயே...

விழிகள் பார்த்து 
உருகி நின்றேன்...!
மொழிகள் சேர்த்து
பருகி தின்றேன்...!
உன் வழிகள் தோறும்
உடன் வந்து செல்வேனே...

காதல் தந்தாய்...!
காத்திருந்தாய்...!!
ஒற்றை இதயமாய்
ஒட்டி கலந்தாய்...!!!
உயிரில் நுழைந்து - என்
உலகம் ஆனாயே...

----அனீஷ் ஜெ...

SHARE THIS

1 comment: