விழுந்து கிடக்கிறேன் நான்...! எதையாவது பிடித்து எழுந்து நிற்க முயற்சிக்கும்போதெல்லாம், கைகளுக்குள் அகப்படுவது குத்தி கிழிக்கும் முள் சுவரே...! வழியும் குருதியை விழிநீரால் துடைத்துவிட்டு பெரும்பாறைகள் கொண்ட வெறும்தரையில் நடக்கிறேன்...! கல்களின் கூர்மைகளில், தோல் தொலைத்த கால்கள் இரண்டும் மெல்லமாய் அழுகின்றன...! இடையிடையே இடி மின்னலுக்கும் கடும் மழைக்கும் பஞ்சமில்லை...! இலைகள் நிறைந்த மரமொன்று தூரத்தில் தெரிகிறது...! இளைப்பாறும் ஆசையுடன் வேகமாய் நான் நடக்கவே, பெரும்புயலொன்று அதை - என் கண்முன்னே சாய்க்கிறது...! கதறி அழுதுகொண்டே தரையில் சாய்கிறேன் நான்...! நான் மறுபடியும் எழுந்து நடந்தாக வேண்டும்...! இந்த பயணத்தைபோலவே கொடுமையாக நகர்கிறது...! வாழ்க்கையும்.... ----அனீஷ் ஜெ...
அமாவாசை நிலவை அண்ணாந்து பார்த்தாய் நீ...! வானமெங்கும் பவுர்ணமி பரவியது...!! நிலா ஒருநாள் கண்ணாடி பார்த்தது...! உன் முகம் தெரிந்தது...!! நிலவுக்கும் செவ்வாய்க்கும் நாற்பதுகோடி கிலோமீட்டராம்...! உனைபார்க்கும்போது மட்டும்தான் நிலவினுள் செவ்”வாய்” தெரிகிறது...! அன்றொரு நாள் ஆம்ஸ்ட்ராங் நிலவின்மேல் கால் பதித்தான்...! ஆனால் நானோ அதைவிட அழகான நிலவில் அடிக்கடி இதழ் பதிக்கிறேன்...!! இன்றிரவு என்னருகில் இரு நிலவுகள் வேண்டாம்...! வான் நிலவே... வந்த வழியே திரும்பிப்போ... ----அனீஷ் ஜெ...
தனிமையில் நிற்கிறேன் நான்...! கடந்து செல்வோர் பலர் காரணம் கேட்டு நகர்கின்றனர்...! துரோகமெனும் வெயிலும் ஏமாற்ற மழையும் - என் உயிர் எரித்து நனைக்கிறது...! கதறி அழ நினைத்தாலும் கண்ணீர் துளிகளை இமைகளுக்கிடையில் இறுக்கி பதுக்கிக்கொள்கிறேன்...! காலங்கள் கடந்து சென்றாலும் - என் கால்கள் கடக்க வழி தெரியவில்லை...! மனம் கனக்கும் - உன் நினைவு பொதியுடன் தனிமையிலே நிற்கிறேன் நான்...! நீ விட்டுச்சென்ற அதே இடத்தில்... ----அனீஷ் ஜெ...
கட்டியணை ! காதலின் ஆழம் சொல்...!! முத்தமிடு...! முகத்தை முகத்தோடு புதை...!! தோள் சாய்...! தேகம் தழுவு...!! இத்தனையும் செய்...! இப்போதே சாகிறேன்...!! ----அனீஷ் ஜெ...