![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5e7jJSoRSPFB3Ant8dobl30gOHxptiCu7VMd3LuA4PpmNVQLe0GIDSEjiwdN9aZ_xXuQvyBXHdSjWrZEuHKjscY91GqigNgHDGof4tuieOBc17nMlTJ9ksN8k2PGr8jpfcwRYZx-we8q3/s1600/anishj.in_093.jpg)
உன் வானவில் பார்வையில்
என் இதயம் இப்போது
வளைவது போல் உணர்கிறேன்...!
பிரபஞ்சத்தின் அணுக்களெல்லாம்
உன் முக பிம்பங்கங்களையே
பிரதிபலிப்பது போல் காண்கிறேன்...!
என் தூக்கங்களை
தூக்கி சாப்பிடும்
உன் நினைவுகளோ,
என்னையும் இப்பொழுது
கொஞ்சம் கொஞ்சமாய்
கொன்று தின்கிறது...!
என் இரத்த நாணங்களில் கூட
உன் நாணம் பூசிய
சிணுங்கல் சிரிப்பே
நிரம்பி வழிகிறது...!
மறைத்து வைத்திருந்த - என்
மனக்கூட்டிலிருந்து
உரக்க கத்துகிறது...!
உனக்கான என் காதல்...
சத்தம் கேட்டதும்,
திரும்பி பார்ப்பாயா..?
விருப்பம் கொள்வாயா...??
காத்திருக்கிறேன் நான்...!
உன் மனம் அறிய ஆவல்...
----அனீஷ் ஜெ...