
என் இருமலின்
இரைச்சல்களுக்கிடையில்
நடு இரவின்
நிசப்தங்களின் சத்தங்கள்...!
சட்டென விட்டுச்சென்ற தூக்கத்தினால்
கட்டிலின்மேல் விழித்துக்கொள்கிறேன்...!
முதுமையும் தனிமையும் - என்
முதுகை இழுத்து
நகரமுடியாமல் செய்கிறது...!
இதயத்தில் வழியே
மெதுவாய் வலியொன்று பரவுகிறது...!
இதயத்துடிப்புகளின்
இடைவெளி குறைய,
மூச்சுக்கும் மூச்சுக்குமிடையே
மிகப்பெரியதோர் இடைவெளி...!
என் கட்டளைகளுக்கு
கட்டுப்படாமல்
இமைகளோ
இறுக மூடிக்கொள்ள முயல்கிறது...!
மரணத்தின் கதவுகள்
திறப்பதுபோல உணர்வு...!
விரைவிலே நான்
மண்ணாடு மண்ணாகிவிடலாம்...!
ஆனாலும் எனக்கு அச்சமில்லை...!
எழுபது ஆண்டுகள்
வழ்ந்து முடித்துவிட்ட நான்,
இந்த மரணத்தின் நொடிக்காகதான்
இரண்டாண்டுகளாய் காத்திருக்கிறேன்...!
என்னை விட்டு
விண்ணில் சென்ற,
அவளோடு
அடுத்த ஜென்மத்திலும் வாழ...
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
0 விமர்சனங்கள்: