
முதல் சந்திப்பே
முகம் பார்க்காமல்
செல்பேசிகளின்
செவிவழியேதான்...!
நீண்ட நாட்களின்
நீண்டதொரு தயக்கத்திற்க்குபின்
உன் முகம் பார்க்கும் ஆசையில்
உன்னிடம் புகைப்படமொன்று கேட்டேன்...!
புன்னகையில் மெல்லிசை கலந்து
புரியாதா சிரிப்பொன்று சிரித்தாய்...!
அந்த சிரிப்பில் எனக்கு தெரிந்தது...!!
அழகாய் உன் ஆயிரம் முகங்கள்...
----அனீஷ் ஜெ...

nice
ReplyDeleteKadaise varikal romba nalla eruku really nice
ReplyDeleteHeeee...sama sama
ReplyDelete