![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikF_5SB7wG2WIeW2J089fNzLgMGLCYtnZJoQBxePIFzXbESg0XaD6hQiojaIFp8AdAbeYrMbxjYjW_dHngiPtkCvejtzuKdTki-Sjun7W9PMbIsrVuBtDSeQkEJth3qW_sCYIDBhom5vE8/s1600/veedu.jpg)
வீடொன்று இருக்கிறது...!
வருபவர்களில் சிலருக்கே
வாசல்கடந்தும் அனுமதி...!
உள்ளிருப்பவர்களோடு
பாகுபாடுமில்லை
பகையுமில்லை...!
வீட்டை நேசிக்கும் சிலரோ
கூட்டி பெருக்கி
வண்ணம் தீட்டுகிறார்கள்...!
வந்தவர்களில் பலரோ
தரையை உடைத்து
சுவரை முறித்து
ஆனந்தமாகிறார்கள்...!
நேசித்துக்கொண்டிருந்தவர்களும்
பலகாலம் செல்ல
பராமரிப்பதை விட்டுவிட்டு
பாழாக்க தொடங்குகிறார்கள்...!
கடுங்கோபம் கொண்ட
வீட்டின் சொந்தக்காரனோ
அத்தனைபேரையும்
அங்கிருந்தே துரத்துகிறான்...!
பாழடைந்துபோன அந்த வீடு
இப்போதும் அங்கேயே இருக்கிறது...!
என் நெஞ்ச்சு கூட்டிற்குள்
வீடொன்று இருக்கிறது...!
----அனீஷ் ஜெ...
![](https://1.bp.blogspot.com/-mllm8XA2qPc/YHiHc3V7npI/AAAAAAAACw0/EI1FO9_QgCszC5dpB07dtlDTw84rmWH4gCLcBGAsYHQ/s0/glsbanner11.gif)
0 விமர்சனங்கள்: