நிஜங்களுக்கும்
நிழல்களுக்குமிடையில்
நிலைதடுமாறும் வயது...!
நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்குமிடையில்
சஞ்சலப்படும் மனது...!
அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும் மனிதர்கள்...!
கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும் உலகம்...!
விரல்பிடித்து நடப்பதாய்
விளக்கம் சொல்லிவிட்டு
விலகிச் செல்லும் சிலர்...!
எவரிடத்தில்
எதையோ எதிர்பார்த்து
ஏமாந்து நிற்கும் இதயம்...!
தன்னம்பிக்கையோடு பயணிக்க சொல்லி
தயங்காமல் அழைக்கும்
தவறான பாதைகள்...!
கண் மூடினால் தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும் கண்கள்...!
முயன்றாலும் கிடைக்காததை
முழுமுயற்சியோடு தேடும்
முட்டாள்தனமான சில தேடல்கள்...!
தந்த இதயத்தை
தவறாமல்
திருப்பி வாங்கும் ஒருவர்...!
சந்தோஷங்களை பறித்துவிட்டு
கவலைகளை மட்டும் தரும்
காலச் சக்கரம்...!
இதுதான் வாழ்க்கை என்றில்லை...!
இவ்வளவுதான் வாழ்க்கை...
-----அனீஷ்...

Send Your Comments on Whatsapp. Click Here
no this is not full stop
ReplyDelete