26 Dec 2010

மனிதனாக பிறந்த இறைமகனே...!


பூமியில் அன்பு
பூத்து குலுங்கவே
பூவாக மலர்ந்தவனே...!

பாலைவன இதயங்களும்
பசுமையாய் மாறிட
பாவிகளுக்காய் வந்தவனே...!

கல்வாரி மலையிலே
காயங்கள் பெறவே
கருணையோடு பிறந்தவனே...!

மனங்கள் எல்லாம்
மகிழ்ச்சியில் நிறைந்திட
மனிதனாய் உதித்தவனே...!

அகிலத்தார் நெஞ்சங்கள்
அமைதியில் திளைத்திட
அன்பாக முளைத்தவனே...!

மாட்டுத்தொழுவத்திலும் - இன்று
மனித மனங்களிலும்
மனிதனாக பிறந்த இறைமகனே...!

-----அனீஷ்...

SHARE THIS

7 comments:

  1. அகிலத்தார் நெஞ்சங்கள் அமைதியில் திளைத்திட அன்பாய் முளைத்தவன்.......நல்ல மன முள்ள்வர்களுக்கு சாந்தியும் ச்மாதானமும் தர வேண்டுவோம்.

    ReplyDelete
  2. happy new year anish

    ReplyDelete
  3. romba nalla eruku ...jesus eppozhdum ungala aasirvadam kudukatum..

    ReplyDelete
  4. really ver nice Anish...
    Kalakureenga...!
    :) :) :)

    ReplyDelete
  5. :) Gayathri
    :) நிலாமதி
    :) Smitha
    :) Jeena
    :) anishka nathan
    :) Kaavya

    அனைவருக்கும் ரொம்ப நன்றி !!

    ReplyDelete