
பூந்தோட்டமொன்று
பரந்து விரிந்து கிடக்கிறது...!
அசைகின்ற செடிகள்
ஆயிரக்கணக்கில் அதில்...!
கிளைகளில் அசைபவை,
கீழை விழுந்தவை என
கோடிகளில் பூக்கள்...!
பெரும் கூடைகளில்
தினம் காலையில்
சேகரிக்கின்றனர் சிலர்
அந்த பூக்களை...!
நூற்றுக்கணக்கான கூடைகளில்
நிரம்பி வழிகிறது பூக்கள்...!
பறிக்கப்பட்ட பூக்கள்,
பிரிக்கப்பட்டு பின்னர்
பயணிக்கிறது வாகனங்களில்...!
பெரும் கடைகள் முதல்
சிறு கடைகள் வரை
பகிரப்பட்டது அந்த பூக்கள்...!
பலர் வாங்கிப்போனார்கள்...!
கடவுளின் சிலைக்கோ,
கல்லறைக்கோ,
தலையில் சூடவோ,
தலைவரின் சிலைக்கோ
எங்கு வேண்டுமானாலும்
சென்றிருக்கலாம் அவை...!
அவள் வந்து
அதிலொரு பூவை வாங்கி
அவள் தலையில் சூடிக்கொண்டாள்...!
அந்த பூந்தோட்டத்தில்,
ஆயிரம் செடிகளில் பூத்த கோடி பூக்களில்,
அந்த பூ மட்டும்
ஆசிர்வதிக்கப்பட்ட பூவானது...!
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
beautiful flowers lucky
ReplyDelete