
என் மனத்தட்டில் மிச்சமிருக்கும்
உன் நினைவு பருக்கைகளை
மென்று தின்கிறது என் உயிர்...!
இடையில் எங்கோ சிக்கி,
இறங்காமல் நிற்கும் நினைவுகளை
கண்ணீர் குடித்தே
கரைத்துவிடுகிறது இதயம்....!
ஆனால் பசி மட்டும்
நின்றபாடில்லை இன்னும்...!
எனை விட்டுச்சென்ற
உனை மட்டும் தேடும்
என் காதல் பசி...
----அனீஷ் ஜெ...
 
 
 Send Your Comments on Whatsapp. Click Here
 Send Your Comments on Whatsapp. Click Here
 
 
 
 
 
0 விமர்சனங்கள்: