
விழியால் நீ பார்த்தால்
பனியாக நான் உருகி
பாய்ந்தோடி வருகின்றேன்...!
மொழிபேசும் உன் உதட்டில்
வெட்கங்கள் தேடி - நான்
வெகுதூரம் செல்கின்றேன்...!
கொலம்பஸாய் மாறி - உன்
தேகத்தில் மிதந்து - புதிய
தேசங்கள் தேடுகின்றேன்...!
ஆக்டோபஸ் போல - உன்
உடல்மேலே பற்றி - உன்னை
உணவாக்கி தின்கின்றேன்...!
நிலவை நகலெடுத்த - உன்
முக இதழ்களில்
முத்தங்கள் கொய்கின்றேன்...!
உலகை பகல்படுத்தும்
சூரியனின் பேரொளிபோல் - உனை
சுற்றியே ஒளிர்கின்றேன்...!
பறவை சிறகடிக்கும்
காற்றிடையிலும் மெல்லிய
கவிதைபோல் தொடுகின்றேன்...!
இரவை கடைந்தெடுத்த
கனவுகளின் வெளிச்சமாய்
காதல் தந்து செல்கின்றேன்...!
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
முதல் முறையாக பார்கிறேன் இனிமை
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteHmm super pa very nice line and beautiful ningalum than Green evening
ReplyDeleteNice
ReplyDeleteBro sema ....Antha last 4lines sema sema
ReplyDelete