
அழகான மாலையில்
அடிவானம் வரைந்த
அரைவட்ட வானவில்..!
நதிநீரின் அசைவுகளிலும்
நகராமல் கிடக்கும்
நிலவின் நிழல்...!
முகமெங்கும் இதழ்களால்
முனகலோடு உதிரும்
மழலையின் புன்னகை...!
அடை மழையின் சத்தமும்,
அதன் குளிரின் வெப்பமும் கலந்த
அதிகாலை தூக்கம்...!
பனித்துளி பஞ்சை
பூக்களாய் சுமக்கும்
புல்நுனி கிளைகள்...!
இத்தனை அழகையும்
மொத்தமாய் சேர்த்தேன்...!
ஆனாலும் அவைகள்
அவளைவிட அழகில்லை...!!
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
பிடிச்சிருக்கு
ReplyDeleteSuper
ReplyDeletesuper
ReplyDeleteBeautiful
ReplyDeleteBeautiful Lines
ReplyDelete