
தேவதைகளெல்லாம்
சிறகு விரித்து பறக்குமென
என்றோ நான் கேட்ட கதை
பொய்த்துப்போனது...!
நீ நடந்தே வருகிறாய்...
வீட்டிற்கு வெளியே
வந்துவிடாதே...!
பூமியிலும் தேவதையாயென
வானம் கீழிறங்கி
வந்துவிடப்போகிறது...!!
உலர்ந்துகிடக்கும் பூவை
உன் விரல்களால் மெல்ல தொடு...!
கடவுள்களை போலவே
தேவதைகளுக்கும்
உயிர்கொடுக்கும்
சக்தியிருக்கலாம்...!
தேவதையைபோல ஏதோவொன்று
வனத்தில் தெரிந்ததென
நாளிதழொன்றில் படித்தேன்...!
மொட்டைமாடிக்கு நீ
சென்று வந்தாயா...?
உன்னைக் கண்ட
வானத்து தேவதைகள்
கடவுளிடம் சண்டையிடுகின்றன...!
வெள்ளை நிற உடை வேண்டாம்,
நீ அணிந்திருக்கும் நீலநிற சுடிதாரை
சீருடையாக்கவேண்டுமாம்...!
----அனீஷ் ஜெ...
Send Your Comments on Whatsapp. Click Here
தேவதைகள்...
ReplyDeleteகவிதையும் அழகு...
அருமையான பதிவு
ReplyDeleteAzhagana varigal... arumaiyana karpanai....
ReplyDelete